“தெய்வமே... இன்னும் சிக்கல் சிங்காரமா ஆக்கி வச்சுராதே... என் பில்லிய லேடி ப்ரூஸ் லீ ஆக்காம நீ விட மாட்ட போல”
“என்ன சித் அபி அவ்ளோ கோபமா இருக்கா. நீ செம கூல்லா இருக்க”
“அபி அவ்ளோ சீக்கிரம் கோபப்பட மாட்டா. அவ கோபத்தில் ஒரு நியாயம் இருக்கும். நீ கேட்டது கண்டிப்பா தப்பு தான். அவளா கொஞ்சம் நேரத்துல அமைதி ஆகிடுவா”
“ஆமாம் பா சந்தோஷ். சின்ன வயசில் கரப்பான் பூச்சிய கூட அடிக்க கூடாதுன்னு சொன்னவ அவ காலேஜ் படிக்கும் போது அவ கூட படிச்ச கிளாஸ்மேட் ஒரு வயசான ஏழை நோயாளிய ரெஸ்பெக்ட் இல்லாம பேசினான்னு எல்லோர் முன்னாடியும் அவன பளார்ன்னு அடிச்சு அந்த ஓல்ட் லேடி கிட்ட மன்னிப்பு கேக்க வச்சா... சோ அவ கோப படுறது எப்போவும் சரியான ஒன்றுக்குத் தான் இருக்கும்” கிருஷ்ணமூர்த்தி சொல்லவும் சந்தோஷ் இப்போது ரொம்பவும் சோர்ந்து போனான்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
வத்சலாவின் "வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா..." - காதல் கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்..
“அங்கிள் நான் இப்படி சொன்னதுக்காக என்ன ரிஜக்ட் பண்ணிட மாட்டாளே... என் வாழ்க்கையே அவ கையில் தான் இருக்கு”
“ஹாஹஹா மாப்ள சொந்த செலவுல சூனியம் வச்சுட்டு இப்போ ஐயோ அம்மான்னா என்ன பண்றது. சரி சரி சித்து இருக்க பயமேன். என் பில்லிய எப்படி வழிக்கு கொண்டு வரதுன்னு எனக்கு தெரியும். இரு வரேன்”
“அபி அபி கதவ திற” சித்தார்த் அவள் அறைக் கதவை தட்டவும் சட்டென திறந்த கதவு அவனை உள்ளிழுத்துக் கொண்டு மூடிக் கொண்டது.
இரு கால்களிலும் சலங்கையை கட்டிக் கொண்டு ருத்ர தண்டவ ரூபத்தில் சினத்தோடு இருந்த அபூர்வா தன் கால் போன போக்கில் ஆடத் துவங்கினாள்.
கோபம் தணிய ஆடட்டும் என்று அங்கே இருந்த நாற்காலியில் அமைதியாக அமர்ந்து கண் மூடியவன் அவள் ஆட ஆட சட்டென ஏதோ வித்தியாசமாய் உணர்ந்து கூர்ந்து கவனித்தான்.
“இவளே புதுசா ஏதாச்சும் ஜதி கம்போஸ் பண்ணிருக்காளா” நினைத்துக் கொண்டே தனது வாட்ச்சில் உள்ள ரிகார்டர் பட்டனை அழுத்தினான்.
“ஹ்ம்ம் ரொம்ப வித்தியாசமான தாளம் தான்” அவன் ஆராய்ந்து கொண்டிருந்தபோதே
“டாடி...டாடி... ஐ மிஸ் ஹிம் சித்து...எனக்கு டாடி வேணும் சித்து..” ஆடிக் கொண்டிருந்ததைப் பாதியில் நிறுத்தி விட்டு சித்தார்த்தை வந்து அணைத்துக் கொண்டு டாடி டாடி என்று அரற்றிய அபூர்வா அவன் சந்தேகத்திற்கு விடை சொல்லிவிட்டிருந்தாள்.
தொடரும்
{kunena_discuss:1080}