பரிசமிடல் பாங்காய் நிறைவேற…விருந்து முடிந்து அனைவரும் விடை பெற…. இப்போது தனிமையில் சந்தித்தது பாண்டிய பராக்கிரமனும், காலையிலிருந்து தன்னவளை சற்றேனும் பார்த்திராத பொன்னிவச்சானும் இவர்களை தன் திட்டபடி நடத்திக் கொண்டிருந்த ருயம்மாதேவியும்.
“மணமகனும் மணமகளும் பார்த்துக் கொள்ளாமல் செய்வதுதான் பரிச முறை….ஆக இன்றைய நிலையை சமாளித்துவிட்டீர்…. ஆனால் விவாஹ வாழ்க்கையில் அப்படியெல்லாம் முடியாதே….” என் தீர்ப்பை என்ன செய்ய போகிறாய் என்பதைத்தான் மானகவசர் இவ்வாறு வினவியது.
பொன்னிவச்சானும் அதுதான் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ஸ்ரீயின் "நின்னை சரணடைந்தேன்" - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்..
“உங்கள் தீர்ப்பு என்ன வேந்தே…? இவர் தன் அத்தை மகளாகிய மஞ்சிகையை காண கூடாது என்பதுதானே…?..... விவாஹம் முடியும் வரைதானே அவள் பொன்னிவச்சானுக்கு அத்தை மகள்…..விவாஹம் முடிந்த பின் அவள் அவரது மனைவியல்லவா….? பொன்னிவச்சான் அவர் மனைவியைக் காணக்கூடாதென்று நீங்கள் ஒன்றும் தீர்ப்பிடவில்லையே…? “ என ஒரு வாதத்தை மிக அமைதியாகவே வைத்தாள் ருயம்மா தேவி…
ஸ்தம்பித்துப் போய் பார்த்தான் பொன்னிவச்சான் என்றால்….. வியந்து போய் நின்றது மானகவசன்.
ஆனால் அடுத்தாய் “ பாண்டிய கலச்சாரத்தின்படி உம்முடைய வாதம் சரி என்றே ஆகிறது. ஆனால் விவாஹம் நடக்கும் அந்த நேரம் ….. குறிப்பிட்டு சொல்வதானால்….விவாஹம் துவங்கும் அந்த கணம்…….மணமகள் மணமகன் அருகில் வந்து அமரும் அந்த தருணம்… அப்போது மஞ்சிகை பொன்னிவச்சாருக்கு அத்தை மகளாய்த்தான் இருப்பாள்….. மனைவியாய் இல்லை…..
மண முறைகள் முடிவுற்ற பின்தான் மஞ்சிகை மனைவியாவாள்….. மண முறைகளை நிறைவேற்ற மணமகன் மணமகளை பார்த்தாக வேண்டும்….அப்படி அந்த தருணம் பொன்னிவச்சார் மஞ்சிகையை பார்த்தால் என் தீர்ப்பை மீறிய குற்றத்திற்காக மரண தண்டனைக்குட்பட நேரிடும்….” என சூழ்நிலையையும் தன் தீர்ப்பின் எல்லையையும் அறிவித்தான் பாண்டிய பராக்கிரமன்.
சிரித்துக் கொண்டாள் ருயம்மா தேவி.
Friends இந்த எப்பிசோடில் நிறைய விஷயங்களுக்கு வரலாற்ற் சான்றுகள் உள்ளன… அவைகளை ANPE forum threadல் ஒன்றன் பின் ஒன்றாக குறிப்பிடுகிறேன்….விருப்பமுள்ளவர்கள் படித்து அறிந்து கொள்ளுங்கள். நன்றி.
தொடரும்
{kunena_discuss:1063}