சுதாகர்-இவங்க எல்லோருக்கும் சீனியர்.கிராமத்திலிருந்து வந்தவன். ரொம்ப சீரியஸ் ஆனவன்.இவனுக்கு கிராமத்தில நம்ப நயன் சொன்னாமாதிரி கனிமொழி காத்துக்கிட்டு இருக்காங்க.
யாமினி-இவங்க ரொம்ப சின்சீயர்.இவங்கள எல்லோருக்கும் புடிக்கும்.யாரு என்ன சொன்னாலும் அவங்களோட வேலையையும் சேர்த்து செய்வாங்க.
மித்ரா-இவங்கள பத்தி சொல்ல தேவையில்ல.நல்ல சாப்பாட்டு ராமாயி.ஆனா அவளப் பார்த்து யாரும் அப்படி சொன்னா நம்ப மாட்டாங்க.
வாங்க நாம போய் எம்.டிய பார்க்கபோனாங்கள நாம போய் பார்க்கலாம்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சித்ராவின் "பச்சைக் கிளிகள் தோளோடு..." - காதல் கலந்த கிராமத்து குடும்பக் கதை...
படிக்க தவறாதீர்கள்..
கவி&கோ எம்.டியை பார்க்க அவனது அழைபிற்காக காத்துக் கொண்டிருந்தார்கள்.
அவங்களிற்கான அழைப்பு வந்ததும் உள்ளே சென்றனர்.
உள்ளே சென்ற கவிக்கு எம்.டிபெயரை பார்த்ததும் ஒரே நேரத்தில் சந்தோசமும், துக்கமும் அவளுக்குள் வந்தது. அது வருத்தமோ இல்லை ஏக்கமா எனக்கு புரியலைங்க.என்கூட வந்த உங்களுக்கும் புரியாதுன்னு உங்கள பார்த்தாலே தெரியுது.
“ஹாய்..மை பிரண்ட்ஸ்...”என்று குரல் கேட்ட உடனே அவளுக்கு புரிந்துவிட்டது அது அவன் குரல். யாராக இருக்க கூடாதுன்னு நினைத்தாலோ அவனே தான் அவன். அவளால் திரும்பி பார்க்காமலே புரிந்துக்கொள்ள முடிந்தது. (நீங்க எல்லாரும் என்ன நினைகிரிங்கனு தெரியுது. இதுதான் எங்களுக்கு எப்பவே தெரியுமே அப்படி தானே நினைக்கிறிங்க. எல்லா கதையிலும் வர மாதிரிதான் நானும் பின்பற்றியிருக்கேன்.)
என்னவனே பலகோடி பேர்களிலும்
என்னால் உன்னை கண்டுகொள்ள முடியும்
என்னவனின் குரலின் மெல்லிய
ஓசை போதும் அவன் இருக்கும்
திசையை நான் அறிய
தொடரும்
{kunena_discuss:1099}