………..அவள் களைத்த முகம் இவனுக்கு பார்க்க இயலவில்லை. இதுதான் உன் ஃப்ரெஷ்ஷா என மனதிற்க்குள் நினைத்தவன் டாக்டர் வந்து பார்த்தாங்களா? எதுவும் மெடிசின்…….
கொஞ்சம் பெயினா இருந்தது அதான் டாப்லேட் தந்தாங்க, நான் சாப்டேன் என்று வெள்ளந்தியாய் சிரித்தாள்.
அப்படின்னா ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானே? எதுக்கு வந்த?
நீங்க இன்னும் சாப்பிடல அதான்……. என்று இழுத்தவளிடம் அவனால் கோபப்பட முடியவில்லை.அவசரமாய் எழுந்து பஸ்ஸின் கீழிறங்கி தன் கையைக் கழுவியவன் அவள் கொண்டு வந்திருந்த உணவை பசிக்காவிட்டாலும், கொண்ட துயரத்தால் தொண்டைக்குள் இறங்காமல் சண்டித்தனம் செய்தாலும் கட்டாயமாக ஒரு பருக்கை மிச்சம் விடாமல் தண்ணீரைக் குடித்தே விழுங்கி வைத்தான்.
நான் சாப்பிட்டேன், நீ போ ……… மாத்திரை வேற போட்டிருக்க போய் படுத்து தூங்கு………
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சித்ரா Vயின் "உன் நேசமதே.. என் சுவாசமாய்..!!" - காதல் கலந்த குடும்பத் தொடர்
படிக்க தவறாதீர்கள்..
சரி அத்தான்…
தன்னுடைய சீட்டைத் தாண்டிச் சென்றவளை நிறுத்தினான்.
என்னவென்று பார்த்தவளின் தயக்கம் புரிந்தும் தன்னை தடுக்கவே இயலாமல் அவள் நெற்றியிலும், கழுத்திலும் தன் கரம் பதித்து காய்ச்சல் இருக்கின்றதோ என பரிசோதித்தான், இல்லையென்று அறிந்து திருப்தியுற்றான். சட்டென்று அவள் தலையில் பதிந்தது அவன் வலக்கரம் வலியுற்ற பகுதியை வருடிக் கொடுக்கும் ஸ்பரிசம் அது…
நான் உன் முடியைப் பிடிச்சு இழுத்திருந்தேன் அனி…….உனக்கு தலை இப்போ வலிக்குதா?
பேச்சற்றவளாய் இல்லை என தலையசைத்தவளை தன்னைக் கடந்துச் செல்ல அனுமதித்தான்.
அனிக்கா முன்னேச் செல்ல அவளுக்கு இடைவெளி விட்டு அவள் செல்லும் தூரம் முழுக்க அவளை பின்னே தொடர்ந்துக் கொண்டிருந்தான் ரூபன்.
என்னை விட்டுப் பிரிந்து
அவ்வானம் கூட
ஒருவேளைச் செல்லலாம்.
அவ்விண்ணின் தூரம் தொட்டு
எனை ஏதோ ஒரு நாள்
வெண்ணிலவும் கூட தவிர்க்கலாம்.
அந்நிலாவொளியில் வெளிவந்து நடமாடும்
வண்டுகளும் கூட
ரீங்காரத்தில் என்னைப் பழிக்கலாம்.
எத்தனை உதாசீனம் நேர்ந்தாலும்
துன்பமில்லை
பெண்ணே எனக்கு.
ஒரு சிறு துன்பம்
உனை அணுகும்
பொழுது மட்டும்..........
என் உயிர் பிரியும்
வேதனை தரும்
பெண்ணே எனக்கு
தொடரும்
{kunena_discuss:970}