(Reading time: 21 - 41 minutes)

நீ தான் மத்தவங்கள நிம்மதியா இருக்க விட மாட்டேங்குற என்று முணுமுணுத்தவன்,”சாப்பிட வா..”என்று கூறிவிட்டு அவள் பதிலை எதிர்பார்க்காமல் அவளது கையை பற்றி அழைத்துச்சென்றான்.

அவனுக்கு தெரியும் அவளா வரமாட்ட,அவளோட பதில் கண்டிப்பா வேண்டாம்னுதான் இருக்கும் என்பதால் அவளை அவ்வாறு இழுத்துச் சென்றான்.

அங்கே அனுவும்,யாமினியும் சாப்பாட்டு பாத்திரங்களை டைனிங் டேபிளில் அடுக்கி கொண்டிருந்தனர்.

அவளை பார்த்தபொழுதே அழுதிருக்காள் என்று தெரிந்தது,ஆனால் அவர்கள் அவளை ஒன்றும் கேட்கவில்லை.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "மூங்கில் குழலானதே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

அவளை அழைத்துசென்றவன்,”போய்..,மூஞ்சு கழுவிட்டு வா..”என்று அறையை கட்டினான்.

உள்ளே சென்றவள் நேராக குளியலறைக்கு சென்று முகத்தை கழுவிக் கொண்டு வந்தாள்.

முகத்தை துடைத்துக் கொண்டு வெளியில் வந்தவள் அந்த அறையை பார்த்து அப்படியே நின்றாள் கவி.   

“என்னை விட்டு எங்கு செல்ல

நீ நினைத்தாலும் உன்னை

நான் தொடர்ந்துக் கொண்டுதான்

இருப்பேன்...,ஏனெனில்

நீ பூ என்பதால் நான்

வண்டானேன்...”

“பாதி இதயம் அங்கே

மீதி இதயம் எங்கே

எனது நெஞ்சத்தை ஏனடி துண்டாக்கினாய்

அந்த நிலைதான் இங்கும்

காதல் இதுதான் எங்கும்

உடைந்த உள்ளதை

முதலில் ஒன்றாக்கலாம்”

AEOM

தொடரும்

Episode # 03

Episode # 05

{kunena_discuss:1099}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.