“ரொம்ப நன்றி உங்க நட்புக்கு, நான் தவறா ஏதாவது பேசி இருந்தா என்னை மன்னித்து கொள்ளுங்கள், நீங்க இப்போ கிளம்புங்க”. என கூறி அவனை தவிர்க்க எண்ணினாள் பூஜா.........
“பூஜா, ரிலாக்ஸ், இன்னும் ரெண்டு, மூணு வருஷம் கழித்து, உன்னோட கல்யாணத்தை பற்றி யோசி. இப்போ மேலே படிப்பதை பற்றி மட்டும் பார்.” என இந்தர் அவளுக்கு மறைமுகமாக தங்கள் கல்யாணத்தை மூன்று வருடம் கழித்து யோசிக்கலாம் என கூறியதை..........
உன்னோட கல்யாணம் என்று அவன் கூறுவதிலேயே, தன்னை தவிர்க்க பார்கிறான் என்று தவறாக நினைத்தாள் பூஜா.........
“சரி நீங்க கிளம்புங்க, நான் ஊருக்கு கிளம்பனும்”.
“சரி நீ கிளம்பி ரெடியா இரு, நான் வந்து உன்னை ஏர்போர்ட்ல் , டிராப் செய்யறேன்.........
அதற்கு பூஜா பதில் ஏதும் கூறவில்லை, அவன் கிளம்பினாலே போதும் என்று இருந்தது.........
இந்தர் கிளம்பி சென்ற பின் சிறிது நேரம் தன் மீதே கோபப்பட்டு அழுது கொண்டிருந்தாள் பூஜா......... நட்புடன் மட்டுமே பழகினேன் என்று சொன்னவனிடம் போய் கல்யாணம் செய்து கொள்ள சொல்லி கேட்டோமே என்று தன் மீதே கோபம், கோபமாக வந்தது. எப்படி திரும்ப அவன் முகத்தில் விழிப்பது என்று அவமானமாகவும் இருந்தது.......
அந்நேரம் அக்கா ஷியாமளா skype ல் அழைத்தார். போன் திரையில் அக்கா பெயரை பார்த்ததும், கண்ணீர் பொங்கி வந்தது. எல்லாவற்றையும் அக்காவிடம் கூறினால் மனதில் உள்ள பாரம் இறங்கும் என எண்ணி அக்கா என அழைத்தாள்.
மறு முனையில் அக்கா பரபரப்புடன் பேசினார். “பூஜா உனக்கு தான் முதலில் சொல்ல வேண்டும் என்று உன்னை கூப்பிட்டேன். இப்போ தான் டாக்டரிடம் போய்ட்டு வந்தோம். நான் அம்மா ஆக போகிறேன் என்று எல்லா testம் எடுத்துட்டு சொன்னார். நீ எப்போ வர்ற? உன்னை உடனே பார்க்கணும் போல் இருக்கு” என்று அக்கா நிறுத்தாமல் சொல்லி கொண்டே போனார்.
“இன்றைக்கு கிளம்புகிறேன் அக்கா. ரொம்ப சந்தோசமா இருக்கு. வாழ்த்துக்கள் அக்கா, அத்தானிடமும் சொல்லிடு........ என தனது வருத்தங்களை மறைத்து அக்காவை வாழ்த்தினாள் பூஜா.......
அதன் பின் பரபரப்பாக இயங்கினாள். சாமான் எல்லாம் பாக் செய்து, இந்தர் வருவதற்குள் கிளம்பி விட வேண்டும் என முடிவெடுத்து , வீட்டை பூட்டி, சாவியை பக்கத்துக்கு அப்பார்மென்ட் பெண்ணிடம் கொடுத்து விட்டு, அரை நாள் முன்னதாகவே ஏர்போர்ட் சென்றடைந்து காத்திருந்து விமானம் ஏறினாள் பூஜா.........
நாமும் அங்கே அவர்களோடு...
{kunena_discuss:1103}