"ஓடி வருகையிலே கண்ணம்மா
உள்ளம் குளிருதடீ
ஆடி திரிதல் கண்டால் உன்னைபோய்
ஆவி தழுவுதடீ!" என தெவிட்டாத இனிய குரல் ஒன்று அவனின் செவி புகுந்து உள்ளத்தைக் கிள்ளியது ! அந்த பரிச்சயமான குரலுக்கு சொந்தக்காரி யாரோ என மூளை யோசிக்க மனமோ அந்த சோடாபுட்டியாய் இருக்க வேண்டும் என விண்ணப்பம் போட்டது.
"தமிழண்ணா...தமிழண்ணா...சொல்லு" என்று கோகுல் உலுக்கவும்,
"ஹான்..என்னடா?" என்றான் அவன்.
"ஹும்கும் நான் சொன்னதே கேக்கலயா?" என்று சிறுவன் அவன் சலித்து கொள்ளவும் யாழினியின் செல்ல சிடுமூஞ்சியின் முகத்தில் அசடு வழிந்தது. அதற்குள் அந்அந்த பாடலும் நின்று போனது.
ஒருவேளை பிரம்மையா இருக்குமோ? என்று அவன் நினைக்கும்போதே முகம் முழுக்க வண்ண பொடிகள் பூசியிருக்க, கைகளிலும் வண்ணகலவையை எடுத்து கொண்டு ஓடி வந்து தமிழ் மீது மோதினாள் யாழினி.
ஹேய் என அவன் எச்சரிக்கும் முன்னரே அவனது வெள்ளை சட்டை வானவிலானது. யாழினியை கண்ட ஆச்சர்யத்தில் இமைக்கவும் மறந்தான் தமிழ்.
"ஹை நம்ம சோடாபுட்டி" என்று அவன் மனம் துள்ள,
"இந்த சிரிக்கும் மூஞ்சி நம்ம சிடுமூஞ்சியா என ஆராய்ந்தாள் யாழினி.
ஆச்சர்யமும் ஆராய்ச்சியும் என்ன ஆச்சுன்னு விரைவில் சொல்லுறேன் ப்ரண்ட்ஸ்.
தொடரும்
{kunena_discuss:994}