(Reading time: 35 - 69 minutes)

“டேய், சந்தடி சாக்கில், என்னோட மனைவியை பேர் சொல்லி கூப்பிடற? என அர்ஜுன் சிரித்து கொண்டே கேட்டார்.

“அம்மாக்கு கொஞ்சம் ஐஸ் வைக்கும் போது கண்டுக்க மாட்டாங்கப்பா” என இந்தரும் சிரித்து கொண்டே கூறினான்.

“ஐஸ்க்கு இதை கண்டுக்க மாட்டேன், ஆனா நீ நைசா ரூட்ட மாத்தாத, விஷயத்துக்கு வா. யார் அது?

“இவ்வளவு துப்பறிஞ்சு இருக்கீங்க, அதை கண்டு பிடிக்கலையா?

“நான் எதையும் துப்பறியலை, எல்லாம் நானா யூகிச்சது தான். உன்னோட எம்.டி யிடம் நான் உன்னை பத்தி கேட்க முடியுமா? எல்லாம் உன் வாயால் கேட்க தான் காத்திருக்கிறேன். என்ன ஒரு வழியா ப்ரபோஸ் செய்திட்டியா, இல்ல இப்போ தான் காப்பத்தி இருக்கேன்,  அவ கொஞ்சம் இம்ப்ரஸ் ஆனவுடன் தான்னு சொல்ல போறியா....

“மா.... நா, உங்க பையன் மா. எல்லாம் ஆச்சு”

“என்னடா, காதலா, கல்யாணமா?”

“மா, பா ...... காதல் நான் செய்து சம்மதிக்க வைத்திருக்கேன். நீங்களா நல்ல நாள் பார்த்து கல்யாணம் செய்து வைங்க ஓகேவா............

“சூப்பர், என் பையன் ஒரு வழியா கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டான். இனிமேல் கல்யாண வேலைகளை பார்க்க வேண்டியது தான். “ என அர்ஜுன் மிக மகிழ்ச்சியாக கூறினார்...........

“இன்னும் அவன் பொண்ணு யார் என்றே சொல்லவில்லை. அதுக்குள்ள உங்கள கையில் பிடிக்க முடியல” என்று சம்யு கூறினார்.

“அது தான் நீ, அன்றே ஒரு நாள் கண்டு பிடிச்சு சொன்னியே, நம்ம வீட்டுக்கு வந்த மூணு பெண்களில் ஒரு பெண் என்று” சம்யுவை பார்த்து சொல்லிவிட்டு, இந்தரிடம் திரும்பி “சரி தானா இந்தர்” என கேட்டார் அர்ஜுன்.

“அம்மாவுடன் சேர்ந்து நீங்களும் இப்போ பயங்கர ஸ்மார்ட் ஆகிடீங்க பா. இல்லன்னா, உங்களுக்கு உங்க மருத்துவமனை, ஆபரேஷன் தியேட்டர் தவிர ஒன்றும் தெரியாது, என கூறி பாராட்டினான்........

“பேச்சை மாத்தாத, பொண்ணு பெயர் என்ன” என அர்ஜுன் கேட்டார்.

“பூஜாவா? என புன்னகையுடன் சம்யு வினவினார்.

“ஸோ, மூணு பேரில் உங்களுக்கு பூஜாவை தான் பிடிச்சு இருக்கா மா.......

“ஏண்டா உனக்கு இங்க என்ன சுயவரமா நடத்தறோம். மூணு பேரில் ஒருத்தியை தேர்ந்தெடுக்க?

“அம்மாவும், பையனும் சேர்ந்திங்கன்னா இன்னைக்கு முழுவது பேசி கொண்டே இருப்பிங்களே, என் அவசரம் புரியாம. சொல்லு இந்தர் யார் அந்த பொண்ணு.........

“நான் அம்மா சொன்ன பொண்ணை தான், நான்  கல்யாணம் செய்துப்பேன். அதனால் பூஜா தான் பா........

“அநியாயத்துக்கு நல்லவனா நடிக்காதடா....... சரி அது போகட்டும், இன்னைக்கு பூஜாவை இங்க கூட்டி வந்து இருக்கலாம் இல்ல. எனக்கும் அவளை ஒரு முறை பார்த்த மாதிரி இருந்திருக்கும். என கிண்டலடித்தார் சம்யுக்தா........

“ஆமா இந்தர் அவளை இங்க வர சொல்லிடு. இன்னும் எதுக்கு என் மருமகள் ரேசொர்டில் இருக்கணும்.” என அர்ஜுன் கேட்டார்.

“நீங்க இப்படி சொல்லுவீங்கன்னு தெரியும். ஆனா அவ இப்போ ரேசொர்டில் இல்லைபா, ஏர்போர்ட் கிளம்பி இருப்பா.

“ஏன்டா அதுக்குள்ள, நான் ஒரு தடவை நல்லா பார்த்திருப்பேனே.

“நாளைக்கு பொண்ணு பார்க்க அவங்க வீட்டுக்கே போகலாம்மா.......

“டிக்கெட் எல்லாம் ஏற்ப்பாடு செய்திட்டியா?

“நாங்க ரெண்டு பேரும் இன்னைக்கு விமானத்தில் கிளம்பறோம். உங்க ரெண்டு பேருக்கும் நாளைக்கு ஏற்பாடு செய்திட்டேன்.

“இந்தர் கண்ணா நீயே எல்லாம் செய்யற, அவங்க வீட்டில் ஒத்துப்பாங்களா?

“இன்னைக்கு போய் பூஜா அவங்க கிட்ட பேசிடுவாமா.......  அவங்க அக்காவுக்கும் காதல் திருமணம் தான். அதனால் எங்களுக்கும் எந்த மறுப்பும் சொல்ல மாட்டாங்கன்னு நினைக்கிறன்.

“ஏண்டா இத்தனை நாள் என்னிடம் சொல்லல. ஒரு நல்ல லவ் ஸ்டோரி கேட்க மிஸ் பண்ணிடேனே........

“மா ஓவர் பீலிங் உடம்புக்கு ஆகாது. நானே எவ்வளவு கஷ்டப்பட்டு இப்போ அவளை சம்மதிக்க வைத்திருக்கேன்.

“கஷ்டப்பட்டு சம்மதிக்க வச்சியா. உனக்கு என்னடா குறைச்சல், அவ ஏன் யோசிச்சா? என சம்யுக்தா வருத்ததுடன் வினவினார்.

“சம்யு, இவன் இவ்வளவு பெரிய பணக்காரன்னு தெரிஞ்சும் அந்த பொண்ணு உடனே சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால் , அவ எவ்வளவு நல்ல மருமகள்ன்னு யோசி”. என்று இடை புகுந்தார் அர்ஜுன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.