அப்பொழுது கரடியாக சாரங்கன் கைப்பேசியில் அழைத்தான்.
“ஹலோ... இங்கிட்டு சாரங்கன்... அங்கிட்டு பக்கியா....”
“அடேய்.... சப்பாணி.... எதுக்குடா இப்போ நந்தி மாதிரி கால் பண்ணின... நீ பண்ணின வேலைக்கு, இன்னைக்கு உனக்கு நானே ராத்திரி சமைச்சு பரிமாறல என் பேரு பாரதி இல்லை...”
“ஏன் உனக்கு இந்தக் கொலைவெறி....”
“நானே ஏகப்பட்ட பேச்சு பேசி ஒரு மாதிரி ராஜாவை ப்ரொபோஸ் பண்ற அளவுக்கு கொண்டுவந்தா இப்படி கரெக்ட்டா கரடி மாதிரி போன் பண்ற.... உனக்கெல்லாம் பாரு கல்யாணம் நடந்தாலும் ஒரு வருஷம் கழிச்சுதான் First Night நடக்கும்... இது இந்த பாரதியோட சாபம்....”, பாரதி பேச இங்கு ராஜாவால் சிரிப்பை அடக்க முடியலை...
“நோ பக்கி நோ.... உன்னோட கரிநாக்காலா சாபம் விட்டுடாத....”
“என்ன சாபம் விடாத... நீ உன் ஆளோட கடலை போடணும்ன்னு சொன்ன உடனே நான் எப்படி டீசென்ட்டா உன்னைப் போகவிட்டேன்.... ஆனா நீ மங்குனி... மங்குனி.... ஏண்டா நாங்க பேசும்போது குறுக்கால வர்ற”
“இங்க பாரு பக்கி, நோ bad words, me பாவம்... ஏய் வெயிட் வெயிட்... இப்போ என்ன சொன்ன வாத்தி உனக்கு வாழ்க்கை தர ஒத்துக்கிட்டாரா.... சரியில்லையே... அவர் வீட்டு அட்ரஸ் சொல்லு... நான் இப்போவே அவரைப் பார்க்கணும்...”, சாரங்கன் சொல்ல அவனை எப்படி அங்கு வரவிடாமல் தடுப்பது என்று முழித்தாள் பாரதி.
தொடரும்
{kunena_discuss:1100}