(Reading time: 36 - 71 minutes)

மனினு கூப்டாதீங்க பா தங்கச்சியையும் மனினு சொல்றது என்னையும் சொல்றது பொம்பளை பேரு பா

ஏன்டா அங்க உனக்கு ரெண்டு பேர பிள்ளை வர ரெடியா இருக்கு இவன் இன்னும் இந்த பேச்ச விடல பாரு மல்லிகா இவன் கூடவும் இத்தனை வருஷம் குப்பை கொட்டி இருக்க சமத்து மருமகள் மா நீ என்றார்

அவள் வாய் பொத்தி சிரித்தாள் மாணிக்க வாசகம் அவளை முறைத்தார்

சொன்ன படியே வளைகாப்புக்கு பின் அவனுடனே அழைத்து சென்று விட்டான் பெரியவர்களும் பின்னாலே சென்றனர்

வீடே சந்தோசத்தில் திளைத்தது

அப்போது வீட்டு ஓணர் வீட்டை விக்க போறேன் வேற வீட்டை பார்த்துக்கோங்க பா என்று குண்டு போட ராஜு தாத்தா ரெண்டு பெரும் சேர்ந்து வீட்டை வாங்கிருங்க பா என்று ஐடியா சொன்னார்

எப்படி தாத்தா என்கிட்ட அவ்வளவு பணம் இல்லையே வினோத் பாதி கொடுத்தாலும் என்னால முடியாதே இப்ப தான் தாத்தா பிரஸ் வாங்கினோம்

கார்த்திக் அப்ப நான் எதுக்கு இருக்கேன் என்று கை கொடுத்தனர் பவித்ரனும் மாணிக்க வாசகமும் ஒரு வாழையாக அவள் பிள்ளைகள் வருவத்துக்கு முன் வீடும் சொந்தமானது

ஏண்டா கார்த்திக் நீ நினைச்சா வேற வீட்டை வாங்கி இருக்கலாமே ஏன் இதை வாங்கின என்றான் வினோத்

வேற வீடு வாங்கலாம் ஆனா இது போல் ஒரே வீட்டில் என்னோட நண்பன் கூடவும் என் தங்கச்சி கூடவும் இருக்க முடியாதே நீயும் அதே காரணத்துக்காக தான் இதுக்கு ஒத்து கிட்டனு தெரியும் டா வினோத் நம்ம காலத்துக்கும் இந்த வீட்டில் சேர்ந்து இருப்போம் என்றான் கார்த்திக்

வினோத் நண்பனை அணைத்து கொண்டான்

ஒரு வழியாக குழந்தைகள் கீர்த்தி வயிற்றில் இருந்து வந்து உலகை பார்த்தனர் ஆண் ஒன்று பெண் ஒன்று அதில் கீர்த்திக்கு சந்தோசம் ரெண்டு பெரும் ஒன்னு போல இருந்தா கண்டு பிடிக்க நான் ரொம்ப யோசிக்கணும்ல மாமா இப்ப ஜாலி

இந்த ஜாலி அதுக்கா இல்லை இன்னொரு பிரசவத்தில் இருந்து தப்பிச்சதுக்கா

ஹி ஹி ரெண்டுக்கும் தான்

சரியான சோம்பேறி டி நீ என்று சொல்லி கொஞ்சினான் கார்த்திக்

சோம்பேறி தான் ஆனா எதுக்கு உங்க கை அங்க அங்க போகுது அத்தை கிட்ட சொல்லிருவேன்

ஐயையோ உன் பக்கத்துலே வர கூடாதுனு சொன்னாங்க டி வினோத்தை காவல் வச்சிட்டு வந்தேன் மாட்டி விட்டுறாத ஏதும் வேணாம் கிஸ் மட்டும் கொடு என்று கேட்டு பெற்று கொண்டு தான் சென்றான்

அடுத்து அபர்ணாவும் நல்ல செய்தி சொல்ல எல்லாருக்கும் சந்தோசம் அவளுடைய படிப்பும் முடிந்தது

பெரிய வயிற்றை தூக்கி கொண்டு பெருக்கி கொண்டு இருந்தாள் அபர்ணா

கீழே குப்பையை போட்டு கொண்டே இருந்தாள் கீர்த்தி

ஏண்டி போதும் டி முடில

ஒழுங்கா செய் இல்லை எங்க அண்ணன் வந்து உனக்கு வேலை கொடுக்கலனு என்னை திட்டுவான்

அவனுக்கும் வேலை இல்லை உனக்கும் வேலை இல்லை

அப்போது அங்கு வந்த ஆஷ்வந்த் அத்தை அத்தை என்றான் கீர்த்தியின் மகன்

என்ன டா கண்ணா என்றாள் அப்பு

உன் வைத்துகுள்ள பாப்பா இருக்கே நான் குப்பை எடுக்கேன் நீ செய்யாத என்ன என்று பொறுக்கி போட்டான்

அவனை தூக்கி கொண்டவள் எங்க டா சஞ்சனா குட்டி

அவ அப்பா மேல படுத்து தூங்குறா நான் அம்மாவ தேடுனேன் ஓடி வந்துட்டேன்

சரியான அம்மா கோந்து என்ற படி அவனை தூக்கி கொண்டாள் கீர்த்தி

வெளியில் சென்று விட்டு வந்த வினோத் அவர்களை பார்த்து சிரித்து விட்டு சிறிது நேரம் பேசி கொண்டு இருந்தான் பின் அங்கு இருந்தா சோபாவில் படுத்து உறங்கி விட்டான்

தன் மகனை தூக்கி இருந்த கீர்த்தி வா டா செல்லம் உங்க மாமாக்கு மேக்கப் போடலாம் என்று சொல்லி அவனை ஒரு வழி ஆக்கினாள் கர்ண கொடூரமாக தூங்கி கொண்டிருந்தவனை அபபோது தான் எழுந்து வந்த கார்த்திக் பார்த்து சிரித்தான்

அஷூ குட்டி எங்க டா உங்க அம்மா சரியான வாலு என்ற படி வினோத்தை எழுப்பினான்

எழுந்தவன் சிரித்து கொண்டிருந்த கார்த்திகை பார்த்து சிரித்தான் இங்கே படுத்து விட்டேன் போல டா

சரி போ ரூம்‌ல வேற சட்டை போட்டுட்டு வா வெளிய போகலாம் அஷ்வ்ந்த் நீ வந்தா தான் வருவான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.