(Reading time: 36 - 71 minutes)

சரி கீர்த்தி என்று சொல்லி விட்டு அழைத்தான்

ரொம்ப சந்தோசம் கார்த்திக் நான் அப்பாட்ட சொல்லுறேன் அங்க வரும் பொது பாக்க வரோம்

சரி ம்மா வைக்கிறேன்

என்ன ஆச்சு மாமா டல்லா இருக்கீங்க

உடனே கிளம்பி வரேன்னு சொல்றவங்களுக்கு பாசமா இல்ல வரும் பொது பாக்குறோம்னு சொல்றவங்களுக்கு பாசமானு யோசிச்சேன்

இனி அத நினைக்க என்ன இருக்கு மாமா நாளைக்கு உங்க அம்மா அப்பா வர போறாங்க இன்னும் 7 மாசத்துல உங்கள அப்பா னு கூப்பிட உங்க பிள்ளை வர போறான் அப்புறம் என்ன இனி அத நினைக்காதீங்க

ஆமா கீர்த்தி தேங்க்ஸ் டா

எதுக்கும்

எனக்கு பாப்பா பெத்து தர போரல்ல அதுக்கு தான்

என்னமோ நான் மட்டும் தான் காரணம் மாதிரி பேசுறீங்க

ஏய் ஏத்தி விடாதடி அப்புறம் நான் பொறுப்பு இல்ல ஒரு கிஸ் பண்ணிக்கட்டாடி

பண்ணாம இருந்துருவீங்களோ

செல்லம் டி நீ அவள் சட்டையையும் கீழே ஒரு ஸ்கிர்ட்டும் அணிந்திருந்தாள் கீர்த்தி மென்மையாக அவளை அணுகியவன் அவள் சட்டையை தூக்கினான்

மாமா என்ன சேருங்க

கிஸ் பண்ண போறேன் பாப்பாக்கு

அப்ப எனக்கு இல்லையா நான் எனக்குன்னு நினைச்சேன்

உன்ன கிஸ் பண்ணா அதுக்கும் மேல போகும் நிப்பாட்ட முடியாது அதான்

போங்க உங்க பிள்ளைக்கே கொடுங்க சண்டை

மென்மையாக அவள் வயிற்றில் முத்த மிட்டவன் அடுத்து அவள் உதடுகளை சிறை படுத்தி அவன் சொன்ன கதையை தொடர்ந்தான்

சில நாள் கழித்து தெரிந்தது உள்ளே இருப்பது ரெண்டு பாப்பா என்று

ஐ ரெண்டு பாப்பா வர போகுது என்று குதித்தார் பவித்ரன் சந்தோஷத்தில் அவருக்கு தலை கால் புரிய வில்லை பொன்மணி தான் விரட்டினார் பேர பிள்ளைகளுக்கு கொடுக்குற பண்டத்தை திருடி சாப்பிட கொன்னுடுவேன் என்று மிரட்டினார்

என்ன மணி நீ இப்படி சொல்லிட்ட கவலை படாத அவங்க கிட்ட கேட்டு தான் வாங்கி சாப்டுவேன்

தலையில் அடித்து கொண்டாள் பொன்மணி உங்களை திருத்த முடியாது என்று சொல்லி

ஆறு மாதம் கழித்து தன் பெரிய வயித்தை தூக்கி கொண்டு தாத்தா விடம் வந்தாள் கீர்த்தி

தாத்தா மாமாவ பாக்கணும் போல இருக்கு கூட்டிட்டு போயேன்

அப்ப ஏன் இங்க வந்த நீ

நீங்க தானே என்னை என் மாமா கிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு வந்தீங்க

ஆமா வயித்துக்குள்ள ரெண்டு பாப்பா இறுக்கம் நீ ஒழுங்கா சாப்பிடாம இருந்தா உன் மாமன் பயந்து எங்களை அலறி அடிச்சு வர வச்சான் கூட்டிட்டு போங்கன்னு ஒரே அழுகை என்ற படி வந்தார் மல்லிகா

அத்தை எனக்கு உங்க பிள்ளைய ரொம்ப தேடுது

அதுக்கு ஏன் கண்ணை கசக்குற நாளைக்கு வந்துருவான் வள காப்பு முடிஞ்சு அவன் கூடவே போ நாங்க ரெண்டு நாளில் பின்னாடியே வரோம் உன் மாமா கூடவே இரு யாரு வேண்டாம்னு சொன்னா

அத்தைனா அத்தை தான்

ஏம்மா மல்லிகா

என்ன மாமா

இப்ப ஒருத்தி இங்க கண்ணீரில மிதந்து நீச்சல் அடிச்சிட்டு இருந்தாலே அவ எங்க

அது போன மாசம் அத்தை இது இந்த மாசம்னு இந்த கிழவனுக்கு சொல்லுங்க

மல்லிகா நாளைக்கு இவள பாரேன் கார்த்திக் பின்னாடியே வாள் பிடிச்சிட்டு சுத்துவா

வெவ்வ வெவ்வ என்று வக்கணம் காட்டினாள் கீர்த்தி

நல்ல தாத்தா நல்ல பேத்தி என்று தலையில் அடித்து கொண்டு சென்றார் மல்லிகா

சொன்ன படியே அடுத்த நாள் அவனுடனே ஒட்டி கொண்டே திரிந்தாள் அவனும் தான் அவளை பார்க்க முடியாமல் தவித்து போனான்

பாத்தியாமா மல்லிகா நான் சொல்லல உன் பிள்ளை பின்னாடியே அவ சுத்துறதை பாரேன் நடக்க முடியல ஆனாலும் அவனை விடுறாளா பாரு

ஆமா மாமா

அப்போது அங்கு வந்த மாணிக்க வாசகம் அவன் மட்டும் என்ன அப்பா ஒரு நிமிஷம் கூட பிரியாம ஒட்டிக்கிட்டு தான் இருக்கான் நல்லா வேளை நீங்க இவங்களை சேர்த்து வச்சீங்க அப்பா நான் கூட சொன்னேன் இது சரி வருமான்னு அப்ப செய்யலைன்னா இப்ப இவ்வளவு சந்தோசமா இருந்திருக்க மாட்டாங்க

எல்லாம் நல்லதுக்கு தான் மணி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.