(Reading time: 36 - 71 minutes)

யாரு சொன்ன

வினோத் ஆனந்தா

போடா பிராட்

தெரியுதுல்ல பேசாம இரு டி காலைல நாலு மணிக்கு எந்திக்கணும் என்று சொல்லி அவள் வாயை அடைத்தான்

அதே நேரம் மேல கீர்த்தி என் மேல கோபமா மாமா என்றாள்

ஆமா டி கோபம் அதான் தண்டனை கொடுக்குறேன் என்ற படி கொஞ்சி கொண்டு இருந்தான்

இதான் தண்டனையா

தண்டனை குடுக்கும் போது இடையில் பேசாதடி என்றவன் மோகத்தில் முத்தெடுத்து கொண்டு இருந்தான்

சிறிது நேரத்தில் அவளை விட்டு விலகியவன் அவளை தன்னோடு இறுக்கி கொண்டு எப்படி டி உன்னால முடிஞ்சது எனக்கு சந்தோசமா இருக்கு ஆனா கீர்த்தி இது ஒரு புக் குடன் நின்னுற கூடாது ஆரம்பித்தால் பெருமை கிடையாது அதில் காலூன்றி சாதித்தால் தான் பெருமை உன்னால் முடியுமா உனக்கு இது தான் பிடிச்சிருக்குனு தெரியுது பிடிச்சதை செய் எனக்கு சந்தோசமா தான் அனால் நீ நிறைய யோசிக்கணும் உன்னோட காதல் என்னை மட்டுமே சுற்றி இருக்க கூடாது எல்லா வழிகளிலும் மாறனும்

என்னோடத படிச்சீங்களா மாமா

கதை படிக்கலை கவிதை படிச்சேன் நல்லா இருக்கு சந்தோஷமாவும் இருக்கு ஆனா என்னை மட்டுமே மைய படுத்தி இருக்கு கீர்த்தி அது மட்டும் மாறனும் ஒவ்வொரு படைப்பிலும் ஒரு தனித்தன்மை இருக்கணும் செய்வ தானே

கண்டிப்பா மாமா

என்னோட புல் சப்போர்ட் உனக்கு இருக்கும் டா குட்டி அடிச்சது வலிச்சதா

ஆமா

அபர்ணா பசிக்கிதுன்னு சொன்னப்ப கஷ்டமா இருந்தது மா அதன் அடிச்சிட்டேன் சாரி டா

சோம்பேறிகளா மூணு பேரும் சாவி எடுத்துட்டு போகாம இருந்துட்டு என்ன சொல்றிங்க ம்ம்

அது மட்டும் இல்ல பயந்துட்டேன் குட்டிம்மா உனக்கு ஒன்னு னா என்னால தாங்க முடியாது டி கீர்த்தி

உங்களுக்கு மூச்சு முட்டும் அளவுக்கு காதலை கொடுக்காமல் நான் எங்கயும் போக மாட்டேன் மாமா

லவ் பண்ணியே சாகடிபண்ணு சொல்லு

கக் கக்க போ

அப்ப இவ்வளவு தள்ளி தான் இருக்கணுமா

எங்க தள்ளி இருக்கேன் ஒட்டி தான் இருக்கேன்

இது பத்தாதுடி உனக்குள்ளே புதையனும் போல இருக்கு டி செல்லம்

மாமா

என்ன மா

அத்தை உங்க கிட்ட ஒன்னு சொல்ல சொன்னாங்க

என்ன நான் சாயங்காலம் பேசும் பொது ஒன்னும் சொல்லலையே

அதுவா அவங்களுக்கு பேத்தியோ பேரனோ வேணுமாம் உங்க கிட்ட கேக்க சொன்னாங்க என்று சொல்லி அவன் நெஞ்சில் முகத்தை புதைத்து கொண்டாள்

ஹா ஹா என்று சிரித்தவன் குடுக்கலாம் தான் அனால் என் பொண்டாட்டி பேபி ஆச்சே

பேபி யா போங்க அப்ப ஏன் கட்டி பிடிச்சிட்டு இருக்கீங்க நான் போறேன்

கோப படாதீங்க செல்லம் அப்ப பாப்பாவை பெத்துக்கலாமா

ம்ம்ம்

ம்ம்ம்னு சொல்லிட்டு எங்க தூங்க போற ம்ம்

போங்க மாமா

போங்க வா காரியத்தையே கெடுத்தியே ...

என்ன தாத்தா மதியம் போல கால் பண்ணி இருக்கீங்க ஏதும் முக்கியமான விஷயமா

ஆமா கார்த்திக் அது நம்ம கீர்த்தி புக் பப்ளீஸ் ஆனதே ரிதம் பப்பிளிகேஷன்

ஆமா அதுக்கு என்ன தாத்தா

அதை விக்க போறாங்களாம்

ஓ சரி தாத்தா வேற பப்பிளிகேஷன்ல அவளை புக் கொடுக்க சொல்லுவோம்

அது இல்லை பா அதை நம்ம கீர்த்திக்கு வாங்கி கொடுத்துட்டா என்ன

தாத்தா ...

ஆமா கார்த்திக் அவளுக்கு இந்த மாதிரி வேலை பிடிக்கும்னு நமக்கு தெரியுமே அதை அவளே செய்ய வச்சா என்ன

அவ பொறுப்பா பாத்துக்குவாளா அவளே குழந்தை மாதிரி

குழந்தைனு யாரையும் பொத்தி பொத்தி வைக்க கூடாது கார்த்திக் அது அவங்க தனி தன்மையை அழிச்சிரும்

இல்லை தாத்தா அது வந்து

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.