“கொஞ்ச நேரத்துல பயந்துட்டேன் மச்சான்… ஆனாலும் நீ வந்துடுவன்னு ஒரு நம்பிக்கை மட்டும் மனசுல ஓடிட்டே இருந்துச்சு… சதியை சமாதானப்படுத்த தான் என்னால முடியலை… தேங்க் காட்… நீ வந்துட்ட….”
இஷான் தன் நண்பனை தொட்டுப்பார்த்து மகிழ்ந்த நேரம், பேச்சுக்குரல் கேட்டு நிமிர்ந்த சதியின் பார்வையில் பட்டான் ஜெய்…
அவனைக் கண்டதும்தான் அவளது கண்களில் ஜீவனே வந்தது…
மடமடவென விழிகள் நீரை பெருக்க, உதடுகள் தன் உணர்ச்சிகளை அடக்க போராட, சட்டென எழுந்து கொண்டாள் சதி…
“நான் தான் சொன்னேலடா… ஜெய் வந்துடுவான்னு… பாரு நான் சொன்னமாதிரியே வந்துட்டான்…”
இஷான் கண்கள் கலங்கியபடி சந்தோஷத்துடன் கூற,
அதற்கு மேலும் சதி அங்கே நிற்கவில்லை…
“ம்ருத்யூ……………………..” என்ற கூவலோடு ஜெய்யை நோக்கி வந்தவள் அவனின் மார்பில் தஞ்சம் புகுந்தாள் தனது கண்ணீரோடு…
அவனைக் காணாது தவித்த அவள் உடலின் செல்கள் அனைத்தும் புத்துயிர் பெற்றது போல் அவளுக்குள் உலாவர, அவளோ அவன் மார்போடு தன்னை புதைத்து கொள்ள விழைந்தாள்…
அவனின் சட்டையைப் பிடித்து உலுக்கியவள், “ம்ருத்யூ……………… ம்ருத்யூ…………. ம்ருத்யூ………….” என அவன் பெயர் ஒன்றையே கூற, ஜெய் அவளின் காதலில் அப்படியே அடங்கி போனான்…
அவனை யாருக்கும் தர மறுப்பவள் போல் அவனை இறுக அணைத்துக்கொண்டவள், மேலும் அவனின் மார்போடு ஒன்றிப்போனாள் ஓயாத அழுகையுடன்…
{kunena_discuss:1001}