(Reading time: 15 - 29 minutes)

  

"அரசே, சின்னவனின் ஆசை எல்லாம் தங்கள் அரசவையில் ஓர் அமைச்சனாக வீற்றிருக்க வேண்டும் என்பதுதான். இதைத் தாங்கள் மறுக்கக் கூடாது' என்றது முயல்.

  

சிங்கம் ஆவாவா என்று சிரித்தது. அதன் சிரிப் பொலி அந்தக் காடெங்கும் எதிரொலித்தது. சின்ன முயல் சிங்கத்தின் பதிலை எதிர்பார்த்து ஏக்கத்துடன் நின்று கொண்டிருந்தது.

  

"பிடித்தால் ஒரு பிடி இருக்க மாட்டாய். உனக்கு அமைச்சர் பதவியா? யாருக்கு என்ன ஆசை இருக்க வேண்டும் என்ற கணக்கே இல்லாமல் போய் விட்டது'' என்று கூறிய சிங்கம் முயலை உற்று நோக்கியது.

  

ஏக்கத்தோடும் பெருநம்பிக்கையோடும் நின்று கொண்டிருந்த சின்ன முயலின் தோற்றம் அதற்கு இரக்கத்தை உண்டாக்கியது.

  

"சின்னப் பயலே, உன் ஆசையை நிறைவேற்று கிறேன். நாளை முதல் உன்னை அமைச்சனாக ஆக்குகிறேன். உனக்கு நாள் ஒன்றுக்கு ஒரு புறா வீதம் சம்பளம் தருகிறேன்'' என்றது சிங்கம்.

  

முயல் விழி , விழியென்று விழித்தது. எனக்கு எதற்குப் புறா என்று அது சிந்தித்தது.

  

உடனே கல கலவெனச் சிரித்த சிங்கம் " ஓவோ! நீ சைவம் அல்லவா? உனக்கு நாள் ஒன்றுக்கு ஒரு முட்டைக்கோசு சம்பளமாகத் தருகிறேன்'' என்று கூறியது.

  

முயலுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. சிங்கத்தின் காலடியைத் தொட்டு வணங்கி விடை பெற்றுக் கொண்டு துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடியது. அது தங்கியிருக்கும் குகைக்குச் சென்று அங்கிருந்த எல்லா முயல்களிடமும் நான்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.