எனக்கு அது போதும் என்றாள் தங்கை.
(போன ஜென்மத்து பந்தமா? கடனா? அந்த ஈசனுக்கே வெளிச்சம்)
அவன் சிம்மையும் சேர்த்து போட தான் டூயல் சிம் போன் வாங்கி வர சொன்னாள் ஆனால் இப்போது அவன் சிம்மை போட்டாள் என்றால் ஆபத்து வரவும் வாய்ப்பு இருக்கு.
பொருமையாக அவன் கை கால் எல்லாம் அடி படாத இடத்தில் சுடு தண்ணீர்ரில் போட்டு பிழிந்த துணியால் துடைத்து எடுத்தாள் அமைதியாக அவள் அவனை கவனித்துக்கொல்வதை டாக்டர்ரும் நர்ஸ்களும் பார்த்து இருந்தனர்.
எனங்க நீங்க இப்ப சரியா இருக்கீங்க தான எனக்கு ரொம்ப பயமா இருக்கு ஈஷூபா... நான் உங்கள இன்னும் முன்னாடியே பார்த்து இருந்து இருந்தால் நான் உங்கள இவ்ளோ அடி படாமல் இருந்து இருக்கும். என்று அழுதாள்.
அவளை தேத்தினார் டாக்டர் அருள்பபிரசாத். அம்மாடி உன் வீட்டுகாரர் நல்ல தான் இருக்கார் டா, அதுவும் இல்லாமல் அவர் ரொம்ப பிட் அன்ட் ஹெல்தியா இருக்கார் டா. உன் வீட்டுகாரர் இதை எல்லாதையும் தாண்டி உன்ன பயப்பட வைக்க கூடாதுனு தான் நினைக்குரார் சோ அவர் உடனே எங்க ட்ரீட்மெண்டுக்கு ஒத்துழைத்தார். சீக்கரம் சரி ஆகிடுவார்.
டாக்டர் சார் நீங்க என்னை சமாதானம் செய்ய சொல்லவில்லை இல்லயா?
இல்ல டா நீ என்னை உன் அப்பா மாதிரி நினைத்து நம்புடா என்றார்.
சரி அப்பா நான் உங்களை நம்புரேன் என்றாள்.
குழத்தை இல்லாத அந்த வயதான தம்பதியர்கள் எப்போதும் யாரையும் தங்களை வருத்தவிடாமல் இருந்தாலும் குழந்தை இல்லாதது மனதை வலிக்கவைக்க தான் செய்தது. அப்பா என்ற வார்த்தை அடிப்பட்ட இதயத்திர்க்கு மயில் இரகால் வருடிய உணர்வு அவருக்கு.
வாடா என்று கையை பிடித்து அழைத்துக் கொண்டு அவர் அறைக்கு சென்றார். அம்மாடி நீ