உங்க அஸ்பண்ட் இப்ப சேப் மேடம் இனி உயிர்க்கு எந்த ஆபத்தும் இல்ல கால் கை எல்லாம் 1 மாதத்தில் சரி ஆகிவிடும்.
ரெம்ப நன்றி டாக்டர் என்று தரையில் மண்டியிட் மிருதுஞ்சயா நன்றி என்று அழுத படி அவள் கூர...
அம்மா நன்றி எனக்கு இல்ல மா உன் தைரியத்துக்கு சொல்லு. அந்த நேரம் மற்ற பெண்கள் போல் உட்கார்ந்து அழாமல் , யாரும் உதவி செய்வாங்கலானு பார்க்காம நீயே அவரை கொண்டு வந்த பார் அது தான் இப்ப அவர் உயிரோட இருக்க காரணம். நீ கலியுக சாவித்ரி டா ராஜாத்தி என்றார் அந்த மருதுவர். உன் கணவர் உன்னால் தான் உயிர் பிழைத்தார் என்று அவளை வாஞ்சையாக தலையில் ஆசிர் வதித்தார்.
மருதுவரால் இப்போதும் நம்ப முடியவில்லை. அவள் உள்ளே நுழைந்து டாக்டர் என்று அலரியதும் அவர் தானே முதலில் பார்தது. கார் ரிசப்ஷனில் அல்லவா வந்திருந்தது. அதுவரை அவள்ளிடம் இருந்த தைரியம் எல்லாம் வடிந்து அவள் கணவன் கொண்டு செல்லபட்டதும் அவள் அப்படியே மடிந்து அழுதது என்ன.
அந்த நிலையிலும் ஒரு குழந்தைக்கு இரத்தம் கொடுத்து உதவியதோடு அந்த ஆப்ரேஷனுக்கு ஆகும் செலவையும் அப்போதே கட்டி இருக்கிறாள்.
அக்கா இப்ப யாரையும் உள்ள அனுமதிக்க கூடாது தான் பட் மனசு கேட்கள நீங்க போய் சாரைப் பார்த்து விட்டு வந்துடுக்க அக்கா காலை ல சார்ரை செக் செய்துட்ட பிறகு தான் அப்பறம் பார்க்க முடியும்.
கை எடுத்து கும்பிட்டவள் மட மட என்று அவன் இருந்த அறைக்கு நுழைந்தாள். அவன் கையை பிடித்து என்னங்க உங்களுகு ஒன்னும் ஆகாது நான் இருக்கேன் என்றவள் அவள் நெற்றியில் முத்தம் ஒன்றை வைத்து விட்டு வெலியே வந்துவிட்டாள். அவன் நிலை அவளுக்கு என்னவோ செய்தது.