'பண்டிகெ நாள் எல்லாரும் சந்தோஷமா சமெச்சி சாப்பட்றாங்க, என்ன இது எழவு? ஏன் நான் சாப்பட வர்றதில்லியா? இல்லேன்னா வரக் கூடாதுங்கற்து உன் எண்ணமா?'
'உங்களெ வீட்டுக்கு வரச்சொல்றதிலே, போச்சொல்றதிலே என் எண்ணம் என்னங்கற்து உங்களுக்குத் தெரியும். நீங்க வீட்லெ இல்லாம எனக்கு ஒண்ணும் செய்யத் தோணலே.'
'ஓஹோ! நான் வீட்டுக்கு வர்லேன்னா சமயல் கிமயல்லாம் நிறுத்திட்டுப் படுத்துக்குவேன்னு சொல்லு. எத்தனெ நாள் அடம் புடிக்கிறியோ நானும் பாக்கறேன். உனக்குத் தோண்றது தோணாமப் போறதெப் பத்தி எனக்கு அக்கறெயில்லே. பண்டிகெ நாள்ளே ஏதோ ஒண்ணு செய்ய வேண்டியது தான் - எத்தென நாள் உன் பிடிவாதத்தெ நிறெவேத்திக்கிறியோ நானும் பாக்கறேன்.'
'பிடிவாதம்' ஒரு பொம்பளெ பிடிவாதம் புடிச்சி ஜெயிப்பான்னு நீங்க நினெக்கறது வெறுங் கனவு. பிடிவாதத்துக்காக நான் சமயல் நிறுத்தலெ' 'இல்லேன்னா கர்வம்! அலட்சியம்! அவ்வளவுதானே?'
'...........'
'ஏன் பேசமாட்டேங்கறெ? நீ என்ன எண்ணத்தலே நிறுத்தனாப் போல?'
எனக்குத் துக்கம் பீறிட்டுக்கொண்டு வந்தது. பைத்தியம் புடிச்சவ போல விக்கி விக்கி அழ ஆரம்பிச்சேன்.
'சீ! வீட்டுக்கு வந்ததும் வராததுமா அழுகெ மூஞ்சியா! பண்டிகெயும் இல்லே பாழு மில்லே. எப்பவும் அழுகெ! அழுகெ! இனிமே உன் வாழ்க்கையே இவ்வளவுதான். சாவறபோது கூட அழுதுகிட்டேதான் இருப்பே.'
தொடரும்