(Reading time: 12 - 24 minutes)
Irulum oliyum
Irulum oliyum

டெப்டி - கமிஷனர் சிரித்துக் கொண்டே சொன்னார்: “பரவாயில்லை ஆயா... வடைகளை விற்று... பணம் பண்ணு ஆயா” அப்பாவித்தனமாகப் பதிலளித்தார்.

இனிமேல் யாரும் வாங்க மாட்டாங்க... குயந்தே... நாழியாயுட்டுது.”

டெப்டி - கமிஷனர் சிரித்துக் கொண்டே, மெதுவடைகளை சைகை காட்ட, போலீஸ்காரர் அதை பொட்டணமாக்கினார். டெப்டி, ஒரு ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து, ஆயாவின் மடியில் போட்டு விட்டு, ஜீப்பில் ஏறினார். வாங்குகிறவர்கள், கொடுத்து விட்டுப் போவதைப் பார்த்து கூட்டம் ஆச்சரியப்பட்டு, ஆனந்தப்பட்டது.

வீட்டுக்காரி, மாடிக்கு ஓடினாள். சிறிது நேரத்தில் ரமணனும் பின்னால் ஓடினான். அவனை அவள் திட்டுவது இன்னும் கும்பல் கலையாமல் இருந்த கூட்டத்திற்கு நன்றாகக் கேட்டது.

--------------

தொடரும்

Go to Valarppu magal story main page

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.