Page 7 of 7
”நாளைக்குச் சரியாகப் போய்விடும் மாமி', என்றான் பாலு அலட்சியமாக.
"என்ன சரியாகப் போகிறதோ, போ! ஆடு மாடுகளைக் கூட இப்படி அடிக்கக் கூடாது" என்றாள் பார்வதி சற்று உஷ்ணமாகவே.
"அப்படியா மாமி! எங்க பள்ளிக்கூடத்து வாத்தியார்கள் இதைவிடக் கேவலமாக அடிப்பார்கள். ஒரு வாத்தியார் பிரம்பால் அடித்தால் வெளியே வரி வரியாகத் தெரிந்து விடும் என்று தலையில் 'நறுக்' 'நறுக்' சென்று குட்டுவார். ஒருவர் காதைப் பிடித்துத் திருகுவார். ஒருவர் வாய்க்கு வந்தபடி ஏசுவார்" என்று பாலு தன் பள்ளிக்கூடத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தான். பிறகு அவன், "மாமா, அடுத்த தடவை என்னை வேறு பள்ளிக்கூடத்தில் சேர்த்து விடுங்கள். அதைப்பற்றிக் கேட்கத்தான் நானும் அம்மாவும் இங்கே வந்தோம்' என்றான்.
--------------
தொடரும்