(Reading time: 10 - 19 minutes)
Muthu Sippi
Muthu Sippi

  

”அதனால் என்ன? நான் துணைக்கு வருகிறேன். வீட்டிலே கார் இருக்குமே....."

  

"அண்ணாவுக்கு வெளியே போக வேண்டியிருந்திருக்கும். திரும்பி வந்திருக்க மாட்டார். இல்லா விட்டால் கார் வந்திருக்கும்....."

  

காரின் பின் ஸீட்டில் ராதா உட்கார்ந்திருந்தாள். இரவ வேளையில் இப்படித் தனியாகப் பிற ஆடவனுடன் செல்கிறோமே என்பதை அந்தப் பேதைப் பெண் உணரவில்லை . இம்மாதிரி ஒரு தைரியம் நம் நாட்டுப் பெண்களுக்குத் தேவைதானா? தாய்க்குலத்தில் கற்பு, பண்பு. அடக்கம், பொறுமை இவற்றைப் பக்க பலமாகக் கொண்டு நம் சமுதாயம் சீரிய முறையில் இயங்க வேண்டு மென்றால் இத்தகைய நாகரிகம்' தேவையா? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கத்தான் வேண்டும்.

  

எத்தனையோ இரவுகளைப் போல் சுவாமிநாதன் ராதா இன்னும் வரவில்லையே என்று வாயிற்படியில் காத்துக் கொண்டிருந்தார். தெருவில் கார் வந்து நின்றது அதிலிருந்து ராதா இறங்கினாள். ’வணக்கம். தாங்க்ஸ்’ என்று சொல்லிக் கொண்டே உள்ளே சென்றாள். மூர்த்தியும் அங்கே இறங்கிக் கொண்டு 'டாக்ஸி' காரருக்குப் பணத்தைக் கொடுத்து அனுப்பினான்.

  

சுவாமி நாதன் தெரு வெளிச்சத்தில் மூர்த்தியின் முகத்தைக் கவனித்தார். 'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்றார்கள் பெரியவர்கள்.

  

அந்த முகத்திலே தெளிவு இல்லை; அந்தக் கண்களில் உண்மையும், நேர்மையும் இல்லை. ஒரு வேளை அவ ருடைய ஊகம் தவறாகக்கூட இருக்கலாம். என்னவோ அவருக்கு அவனை அவ்வளவாகப் பிடிக்கவில்லை.

  

உள்ளே சென்றவர், "யாரம்மா அந்தப் பிள்ளை?" என்று கேட்டார். அவள் பெண்கள் கல்லூரியில் படித்துத் தேறிய மாணவி ஆதலால், ஓர் ஆடவன் அவளுக்கு நண்பனாக இருக்கமுடியாது என்பது அவர் தீர்மானம். இதுவரையில் இப்படி யாரும் அவளுடன் வந்த தில்லையே .

  

”தெரிந்தவர்" என்று பதில் கூறினாள் ராதா.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.