"சாந்தலிங்கம் தன் நன்மைக்காகக் கேட்கவில்லை."
"சொந்த வீடாக இருந்தாலும், அண்ணன் தம்பி கேட்பதில்லையா?"
"வாழைப்பழத் தோலை நடுத்தெருவில் போடாதே என்று காந்தியடிகள் யங் இந்தியாவில் எழுதவில்லையா?"
"அது பைத்தியம்."
"நீ பைத்தியம்."
"நீதான் பைத்தியம்."
இந்த நிலையில் சாந்தலிங்கம் எழுந்து, "நான் சிறிது நேரம் பேசலாமா?" என்றான். எல்லாரும் அமைதியானார்கள். "என்னால் இவ்வளவு தொல்லை, இவ்வளவு பெரிதாக முடியும் என்று எதிர்பார்த்திருந்தால் நான் வாயைத் திறந்திருக்க மாட்டேன். இன்னும் சில நாளில் பி.ஏ. தேர்வு எழுதி முடித்துவிட்டு நான் விடுதியை விட்டு வெளியேறப் போகிறேன். இரண்டு ஆண்டுகள் வாணியம்பாடியில் இருந்து படித்தேன். இரண்டு ஆண்டுகள் இங்கே இந்த விடுதியில் இருந்தேன். என்னுடைய அனுபவத்தால் - நல்லது செய்யவேண்டும் என்ற ஆர்வத்தால் - அவசரப்பட்டுச் சொல்லிவிட்டேன். மன்னிக்க வேண்டும்" என்று சொல்லிவிட்டு உட்கார்ந்தான்.
"மன்னிப்புக்கு இடமே இல்லை."
"குற்றமே இல்லை."
"மன்னிப்புக் கோரவேண்டிய ஆள் நடிகர் சந்திரன்தான்."
"இல்லை.இல்லை."
இந்தக் குரல்கள் மறுபடியும் வளருமோ என்று அஞ்சினேன். ஆனால் நியாயத்தின் குரல்கள்