ரசித்துக்கொண்டிருந்தான்.
பட்டப்பாவுக்கு வெட்கமாக இருந்தது.
''சீச்சீ என்ன ஸார் இது? கண்டதுகளைப் போய்ப் பார்க்கிறீங்க'
அவன், 'ஓஹ்ஹோ" என்று சிரித்துவிட்டு, "கண்டதா? இதுகான் வாழ்க்கை. உங்கப்பா, உங்க தாத்தா,முப்பாட்டன் எல்லாரும் ரசித்த விஷயம். அவாள்ளாம் கோயிலுக்கு சுவாமி பாக்கவா போனா. இந்த மாதிரி சிற்பங்களைப் பார்க்கப் போனா. இப்ப ரொம்ப சௌகர்யமா "போட்டோ"வா வந்திருக்கு வா உட்கார்ந்து நீயும் பாறேன்'
இதையெல்லாம் பார்க்கறதிலே என்ன புண்ணியம் சார்?
"புண்ணியமாவது பாவமாவது? இன்னும் ரசனையோடு வாழ்க்கையைச் சுவைக்கலாம்'
''எனக்கு ஓண்ணும் தோணலை சார் என் பிறவியே வேறே. இதிலெல்லாம் எனக்கு நாட்டமே இல்லை"
"புரியறது"
"என்ன சார்?"
"உன்னைப்பத்தி புரியறது பாவம்! அந்த அழகானப் பொண்ணை இப்படி ஏமாத்தி இருக்க வாண்டாம் முட்டாள்."
"மருந்து கிருந்து இருக்கா சார்? சாப்பிட்டு பார்க்கிறேன்"
"அதான் போடறானே. முத்து பஸ்பம், தங்கபஸ்பம்னு டிரை பண்ணு "