Page 9 of 9
"அதெல்லாம் ஒண்ணும் இல்லே. அங்கே இருக்கப் பிடிக்கலே. பூரணி அக்கா மாதிரி எனக்கு யாரும் பேச்சுத் துணைக்குக் கூட இல்லை..."
"முன்னே கல்யாணத்துக்கு முன்னே யார் இருந்தார்கள்? "
"சாயிராம்னு ஒருத்தர் வருவார். இப்ப அவர் வந்தா எங்கம்மாவுக்குப் பிடிக்கலை"
வெளியே வெயில் குறைந்து வந்தது. விளக்கேற்றுகிற நேரத்தில் ஊர் வந்து சேர்ந்தார்கள்.
வீட்டுக்குள் அவள் வந்ததும், "என்ன இவ்வளவு சீக்கிரம் வந்துட்டே? நீ வரப்போறேன்னு பட்டப்பா சொல்லலையே" என்று கேட்டாள் கங்கம்மா.
பாலுவைப் பார்த்து, "நீயும் இப்பத்தான் வரியா? ராத்திரி இங்கேயே சாப்பிட்டுடு...'' என்றாள்.
----------
தொடரும்...