போகலாம்"
"அம்மா வர்ற நேரம்"
"அவ பாட்டுக்கு வந்துட்டுப்போறா. நான் என்ன அசலா அன்னியமா? ஒண்ணும் சொல்ல மாட்டா சீக்கிரம் கிளம்பு "
நர்மதாவுக்கு பயமாக இருந்தது. ஏதோ அசட்டுத் துணிச்சலில் உள்ளே போய் உடை மாற்றிக் கொண்டாள். அவள் வாசல் பக்கம் வரவும் நர்மதாவின் அம்மா உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.
தெருக்கோடியில் போய் நின்றுகொண்டிருந்தான் சாயிராம்.
"எங்கேடி கிளம்பரே?"
"சினிமாவுக்கு"
"யாரோட...?"
அவள் பேசாமல் தெருவில் நிற்கும் அவனைச் சுட்டிக் காட்டினாள்.
"உன் சின்னபுத்தி, அல்பபுத்தி உன்னை விட்டுப்போகலையே. இப்ப நீ கல்யாணம் ஆனவ. அவனுக்குத் துரோகம் பண்ணப் படாதுடி"
“ நான் யாருக்கும் ஒரு துரோகமும் பண்ணவில்லை...அவர் தான் எனக்குத் துரோகம் பண்ணியிருக்கார்'
'சொல்லுவேடி சொல்லுவே. நம்ப கெட்ட கேட்டுக்கு பணமும் காசுமா கிடைச்சான் பார். சொல்லுவே "
நர்மதா சீறினாள். "பணம், பணம் காசு, காசு! நீ சாகச்சே எல்லாத்தையும் எடுத்துண்ட