நர்மதாவும் சட்டென்று எழுந்து விட்டாள்.
நர்மதா விரிவாக அம்மாவுக்கு எழுதினாள்.
"உன் மாப்பிள்ளையை ஒரு வாரமாகக் காணவில்லை. நான் தனியாக இருக்கேன். கிளம்பி வரவும்..."
சிலரால் தான் ரகசியங்களை காப்பாற்ற முடியும். பலரால் காப்பாற்ற முடியாது.
வெங்குலட்சுமி எட்டு குடித்தனங்களுக்கும் தெரியும்படி இரைந்து கத்தினாள்.
"படுபாவி! கிளியாட்டமா இருக்கிற எம்பொண்ணை ஏமாத்திக் கல்யாணம் பண்ணிண்ட பாவம் போதாதுன்னு அவளை விட்டுட்டு ஓடியும் போயிட்டான்!"
சாயிராம் சிந்தித்தான். என்ன ஏமாற்றினான்? புரிந்து போயிற்று.
நர்மதா அன்று இருந்தது போலவே இன்றும் இருக்கிறாள். வாடாமல் வதங்காமல், கசங்காமல் அப்படியே புதியவளாக.
கிழவிக்குத் தான் துணை வருவதாகச் சொல்லிக் கொண்டு சாயிராம் வெங்குலட்சுயோடு வந்து சேர்ந்தான்.
நர்மதா அம்மாவைக் கொல்லைப்பக்கம் அழைத்துப் போய் ரசசியமாக, அண்ணாவை அழைச்சுண்டு வரதுதானே? இவனைப் போய்த் துணைக்கு அழைச்சுண்டு வந்தியே” என்று கேட்டாள்.
"அண்ணாவா? அவன்தான் பொண்டாட்டியோட பட்டணம் போயிட்டானே. சினிமாவுக்கு ஆள் பிடிச்சுக் கொடுக்கிறதாம். அவன் பொண்டாட்டி சினிமாவிலே நடிக்கப் போறாளாம்."