வருவதாக உத்தரவு கேட்டாள்.
''உனக்கு இந்த வீட்டில் என்ன கஷ்டமிருந்தாலும் கொஞ்ச நாளைக்குப் பொறுத்துக் கொண்டிருக்கக் கூடாதா அம்மா?" என்று சர்மா கேட்டார் நாட்டுப் பெண்ணிடம்.
“இல்லை மாமா! குழந்தைக்கும் இடம் மாறுதல் ஏற்பட்டால் நல்லது. கொஞ்ச நாளைக்கு என் தமையன் வீட்டில் இருந்து விட்டுத்தான் வருகிறேனே?' என்று அவள் வற்புறுத்தவும் சர்மா அவளை ஊருக்கு அனுப்பி வைக்க இசைந்தார்.
பானுவையும், சம்பகத்தையும் ரயிலேற்றி விடச் சென்றிருந்த சடகரன் அவளிடம், "மதனி! என்னவோ அம்மாவின் திருப்திக்காக இந்தக் கல்யாணம் நடக்கிறது. நீங்களும் இல்லாமல் போகிறீர்களே?" என்று கேட்டான் மனத்தாங்கலுடன்.
சம்பகம் பெருமூச்சு விட்டாள்.
“ஒருவருக்காக உங்கள் வாழ்க்கையைப் பாழாக்கிக் கொள்ளாதீர்கள். நான் இருந்து என்ன ஆகவேண்டும்? ஆசையுடன் என்னை யாராவது இருக்கும் படி கூறினார்களா? கொஞ்ச காலம் கண் மறைவாகத் தான் இருந்து விட்டு, வருகிறேனே" என்று கூறிவிட்டு கண்ணில் ததும்பும் நீரை முந்தானையால் துடை த்துக் கொண்டாள்.
சங்கரனுக்கு வேதனை தாங்கவில்லை. அக்னி சாட்சி யாகக் கைப்பிடித்த மனைவியை மறந்து வாழத் தன் தமையனால் முடிந்த போது,அவனை மறந்து வாழ சர்பகத்தால் முடியவில்லை காமுவை மறந்து இன்னெருத்தியைத் தான் மணந்து கொண்டாலும், காமு தன்னை மறந்து விட மாட்டாள். தான் மறக்கலாம், அவள் மறக்கக் கூடாது. இது என்ன சுயநலம்?
சங்கரன் கேவலம் பணத்தின் முன்பு கோழையாக மாறி விட்டான். ஆயிரம் மனக் கோட்டைகள் கட்டிக் கொண் டிருக்கும் காமுவை ஒரு நொடியில் அவனால் உதற முடிந்தது.
"ரயில் வண்டி 'கூ' என்று கத்திக் கொண்டு புறப் பட்டது.பானு,வியாதியால்மெலிந்து போன தன் பிஞ்சுக்கை சுளை ஜன்னலுக்கு வெளியே நீட்டி சித்தப்பாவுக்குக் 'டாடா` காட்டினாள்.
தொடரும்...