Flexi Classics தொடர்கதை - பனித்துளி - 05 - சரோஜா ராமமூர்த்தி
சம்பகம் திரும்பினாள்!
பொன்மணி கிராமத்தின் தெருக்கோடியில் தபால்காரனின் தலையைக் கண்டதும் காமு உள்ளம் பதைக்கச் கொல்லைக் கிணற்றங் கரையில் நின்று அவன் அவர்கள் வீட்டிற்கு ஏதாவது தபால் கொண்டு வருகிறானா என்று பார்த்துக் கொண்டிருப்பாள். அடுத்த வினாடி. அவள் மனக்கண் முன்பு முத்துப் போன்ற எழுத்துக்களில் சங்கரன், "அப்பாவும், அம்மாவும் நான் காமுவைக் கல்யாணம் செய்து கொள்வதைப் பற்றி ஆட்சேபணை கூறவில்லை. கூடிய சீக்கிரம் உங்கள் சௌகரியம் போல் முகூர்த்தம் வைத்துக் கொள்ளலாம்" என்று எழுதிய கடிதம் ஒன்று திரைப் படம்போல் தோன்றும். ஒன்றுமில்லாத ஏழைப் பெண்ணை மனம் உவந்து ஏற்றுக்கொள்ளும் அந்தப் பெரியோர்களுக்குத் தன் சரீரத்தைச் செருப்பாகத் தைத்துப் போட்டாலும் ஈடாகாது என்று நினைத்துக் கொள்வாள் காமு.
ராமபத்திரய்யரும் தினம் சங்கரனிடமிருந்து கடிதத்தை எதிர்பார்த்துக் கொண்டுதான் இருந்தார். சங்கரனின் மௌனத்துக்குக் காரணம் விளங்காமல் அவர் திகைத்துக் கொண்டிருந்தபோது, தபால்காரன் சாவகாசமாக இரண்டாம் கல்யாணக் கடிதங்களை அவரிடம் கொடுத்து விட்டுப் போனான்.
ஒன்று முத்தையாவின் மூன்றாந்தாரக் கல்யாணக் கடிதம். மற்றொன்று சங்கரனின் கல்யாணக் கடிதம்!
"டாக்டர் மகாதேவன் அவர்களின் குமாரத்தி சௌ. நீலாவை கடிதத்தைக் கையில் வைத்துக் கொண்டு ஆழ்ந்த யோசனையில் உட்கார்ந்து விட்டார் ராமபத்திர அய்யர்.
பணம் பணத்துடன் சேர்ந்து விட்டது. அவருடைய ஆசையை நினைத்து அவருக்குச் சிரிப்பு வந்தது. யாராவது சாதாரணவரனாக ஒன்று பார்த்துச் சொல்லும்படித்தானே அவர் சங்கரனைக் கேட்டார்? ஆசையையும்,நம்பிக்கையை யும் ஏற்படுத்தியவன் அவன் தான்.
கொல்லையிலிருந்து திரும்பிய காமு தகப்பனாரின் வே தனை படர்ந்த முகத்தைக் கவனித்தாள். ஊஞ்சல் பலகையில் இரண்டு மஞ்சள் கடுதாசிகள் கிடந்தன.