''மன்னி! பானு எங்கே?' என்று கேட்டான்.
“ஜுரம் நெருப்புப் பறக்கிறது. நான் வருகிறேன்” என்று கூறிவிட்டு, சம்பகம் அங்கிருந்து போய்விட்டாள்.
அடுப்பங்கரையில் தன்னுடைய மேற்பார்வையில் தயாரான ரவாஸொஜ்ஜியையும், வெள்ளி டம்ளரில் காபியையும் எடுத்துப் போய் மீனாட்சி அம்மாள் டாக்டர் மகாதேவனுக்கு உபசாரம் பண்ணினாள்.
"சீர் விஷயங்கள் எல்லாம் நீங்கள் ஒன்றுமே சொல்ல வேண்டியதில்லை. எனக்கு இருப்பதெல்லாம் நீலாவுக்குத் தான். அவளைத் தவிர வேறு யாருக்குக் கொடுக்கப் போகிறேன் நான்?” என்று பெருமையுடன் கூறி முடித்தார் ம காதேவன்.
"சங்கரனை ஒரு நிமிஷம் பார்த்துவிட்டுப் போய் விட்டால் தேவலை" என்று மகாதேவன் அவசரப்படுத்தவே, மறுபடியம் மீனாட்சி அம்மாள் அவனைத் தேடிக் கொண்டு கொல்லைப் பக்கம் வந்தாள். ஆனால், சங்கரன் அங்கு இல்லாமல் குழந்தை பானுவின் பக்கத்தில் உட்கார்ந்திருந் தான். நெருப்புப் பறக்கும் ஜுர வேகத்தில் குழந்தை மூச்சு விடுவதற்கே திணறினாள். பக்கத்தில் சம்பகம் துயரமே வடிவாக உட்கார்ந்திருந்தாள்.
'ஏண்டா, ஒரு நாழியாக உன்னைத் தேடுகிறேன். அவர் உன்னைப் பார்க்க வேண்டும் என்று காத்துக்கொண்டிருக் கிறார். நீ பாட்டுக்கு இங்கே உட்கார்ந்திருக்கிறாயே? இதுக்கு என்ன முழுகி விட்டதாம் இப்போ?" என்று அதிசயத்துடனும், ஆத்திரத்துடனும் கேட்டாள் மீனாட்சி அம்மாள்.
சங்கரனுக்குத் தாயின் குணம் தெரியும். தமையனால் நிராதரவாக விடப்பட்ட குழந்தை பானுவும், சம்பகமும் அந்த வீட்டில் படும் அவஸ்தையும் தெரியும்.
"வருகிறேன் அம்மா, பானுவுக்கு ஜுரம் அதிகமா இருக்கிறதே? சாயங்காலம் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் டாக்டர் வீட்டுக்குக் கூட்டிப் போய் இருப்பேனே?"
பிரசன்னமாக இருந்த மீனாட்சி அம்மாளின் முகம் கடு கடுவென்று மாறியது. கோபத்தால்