முகம் சிவக்க சம்பகத்தை உருட்டி விழித்துப் பார்த்தாள்.
"அதுக்குத் தான் குளிர் காலமானால் காய்ச்சலும், இருமலும் வருகிறதே? இவள் செல்லம் கொடுத்துக் கொடுத்து குட்டிச் சுவராக்குகிறாள் அதை. கண்டும் காணாமலும் வெறுமனே எதையாவது தின்று கொண்டே. இருந்தால் உடம்புக்கு வராதா?"
சம்பகமோ, சங்கரனோடு பதில் கூறுவதற்கு முன்பு ருக்மிணி அங்கு வந்து சேர்ந்தாள்.
"நன்றாக இருக்கிறதே மரியாதை!அவர் எத்தனை நாழி உனக்காகக் காத்திருப்பார்? போய் ஒரு நிமிஷம் பேசி விட்டுத்தான் வாயேண்டா!" என்று உரிமையுடன் தம்பியை அதட்டி, சங்கரனை அங்கிருந்து ஹாலுக்கு அனுப்பி வைத்தாள்.
தொலைவில் பொன்மணி கிராமத்தில் சிறிய வீட்டில் பொறுமையே உருவான காடுவின் அழகியமுகம் மறுபடியும் சங்கரனின் மனக் கண் முன்பு தோன்றி மறைந்தது. அங்கு அவன் அவளுடன் பேசிய பேச்சுக்கள்,ராமபத்திரஅய்யரிடம் நம்பிக்கையுடன் கூறிவிட்டு வந்த வார்த்தைகள் யாவும் கடலில் கரைத்த சர்க்கரை போல் மறைந்துவிட்டன. திரண்ட செல்வமும், அழகிய பெண்ணும், போக வாழ்க்கை யுமே அவன் முன்பு பிரும்மாண்ட உருவில் தோன்றின.
“ஹல்லோ!" என்று டாக்டர் மகாதேவன் சங்கரனின் கையைப் பிடித்துப் பலமாகக் குலுக்கினார். பதிலுக்குப் புன்சிரிப்புடன் அவர் கையைப் பிடித்துக் குலுக்கி விட்டு மரியாதையாக நின்றான் சங்கரன்.
"அப்படியானால் முகூர்த்தம் வைத்து விடுகிறேன், மிஸ்டர் சர்மா! என்ன சங்கரா?" என்று கம்பீரமாகக் கேட்டார் அவர்.
சங்கரனும், அங்கு இருந்த பெரியோர்களும் தலை அசைத்து ஆமோதித்தனர்.
உள்ளே.குழந்தை பானு மூச்சு விட முடியாமல் திணறு வதைக் கண்டு சம்பகம் கைகால் பதற ஹாலுக்கு வந்தாள்.