பட்டினம் வந்ததும் அவள் காமுவிடம் தன் விலாசத் தைக்கூறி, ஏதாவது உதவி தேவையானால் தன்னை வந்து பார்க்கும்படி சொல்லிவிட்டுப் போனாள்.
-----
மத்தியானம் சாப்பிடுவதற்காக நீலா மாடி அறையி லிருந்து கீழே இறங்கி வந்தாள். முழங்கை வரை நீண்டிருக்கும் 'லினன் சோலி' மீது வெண்மையான மஸ்லின் புடவை காற்றில் பறந்து கொண்டிருந்தது. உதடுகளில் வெற்றிலைக்குப் பதிலாகச் சிவப்பு சாயத்தைத் தீட்டி இருந்தாள். இரட்டைப் பின்னல்களை எடுத்து முன்புறம் போட்டிருந்தாள் அவள். சமையற்கட்டின் போஜன கூடத்தில் அவள் வருவதற்கு முன்பே வெள்ளித் தட்டை வைத்து மணை போட்டிருந்தாள் சமையற்கார மாமி. தூங்கி வழிந்த கண்களோடு நீலா மணையில் வந்து உட்கார்ந்து கொண்டாள். குடும்பப் பெண்ணுக்கு இருக்க வேண்டிய அன்போ, அடக்கமோ எதுவுமில்லாமல், யாரையும் லட்சியம் பண்ணாமல் அவள் இருப்பதைப் பார்த்ததும் சம்பகத்துக்கு ஆச்சரியமர்க க இருந்தது. 'கணவன் எழுந்திருப்பதற்கு முன்பு தான் எழுந்து, கணவன் உறங்கிய பின்பு உறங்கும்' பாரத நாட்டுப் பெண்களின் பண்பாடு எங்கே? பகல் பதினோரு மணிவரை அரைத் தூக்கத்தில் கழிக்கும் இந்த நீலா எங்கே?
"ஏனம்மா? உன் ஓரகத்தி ஊரிலிருந்து வந்திருக்கிறாளே, பார்த்தாயா?" என்று கேட்டுக் கொண்டே சாப்பிடும் கூடத்தை அடைந்தார் சர்மா. சமையலறை வாசற்படியில் உட்கார்ந்திருந்த சம்பகம் மரியாதையாக எழுந்து நின்றாள். நீலா அதற்கு அவரிடம் நேரிடையாகப் பதில் ஒன்றும் கூறாமல், 'ஓஹோ!” என்று தன் வில் போன்ற புருவங்களை நெரித்துச் சம்பகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். "பலரால் அலட்சியம் செய்யப்பட்டும் லட்சியம் நிறைவேறும் வரையில் அலட்சியத்தைச் சகித்துக் கொள்ளுவேன்” என்று கூறுவது போல் சம்பகமும் நீலாவைப் பார்த்தாள். பிறகு, “இன்று காலையில் தான் வந்தேன்" என்றாள்.
சில நிமிஷங்களில் சாப்பாட்டை முடித்துக் கொண்டு நிலா வெள்ளித் தட்டிலேயே கை அலம்பி விட்டு எழுந்தாள். கடனே சமையற்கார மாமியைப்பார்த்து, 'மூன்று மணிக்கு சினிமாவுக்குப் போகிறேன் மாமி. அதற்குள் காபி போட்டு விடுங்கள்" என்று கூறி விட்டு, 'அவள் ஏதாவது தன்னுடன் பேசுவாளா? என்று நிற்கும் சம்பகத்தைக் கவனியாமல் மாடிக்குச் சென்று விட்டாள் நீலா. சமையற் கார மாமி 'ஹும்' என்று ஒரு பெருமூச்சு விட்டாள்.