(Reading time: 19 - 37 minutes)
Panithuli - Saroja Ramamoorthy
Panithuli - Saroja Ramamoorthy

   

'குழந்தையோடு பேசுகிறதுக்குக் கூட வருஷக் கணக்கில் பழக வேண்டுமா சம்பகம்? கபடமில்லாதவர் களைக் குழந்தை மனம் படைத்தவர்கள் என்று நாம் சொல்லுவதில்லையா?"

   

சமையற்கார மாமி நீலாவின் பேரில் ஏதோ சொல்ல ஆசைப்படுகிறாள் என்பது சம்பகத்துக்குத் தெரிந்து விடவே பேச்சை வளர்த்த விரும்பாதவள் போல் அவள் அப்பால் போய்விட்டாள்.

   

பகல் மூன்று மணிக்கு நீலா காபி சாப்பிட கீழே வந்தாள். அப்பொழுது அவள் உடை அலங்காரம் வேறு தினுசாக மாறி இருந்தது. பதினெட்டு முழப் புடவையை மடிசார் வைத்துக் கட்டிக் கொள்ளும் மீனாட்சி அம்மாள் - படு கர்னாடகமான மீனாட்சி அம்மாள்-தன் நாட்டுப் பெண் பைஜாமாவும், ஜிப்பாவும் அணிவதை ஆட்சேபிக்க முடியவில்லை! காபி அருந்திவிட்டு, நீலா சினிமாவுக்குக் இளயபினாள் அவள் சமையற்கட்டைத் தாண்டுவதற்குள் மீனாட்சி அம்மாள் தயங்கிக் கொண்டே அவள் எதிரில் வந்து நின்றாள். பிறகு மென்று விழுங்கிக் கொண்டே, "ஏனம்மா சங்கரனும் வருகிறானோ உன்னோடு சினிமா விற்கு?" என்று கேட்டாள்.

   

"நான் ஒன்றும் அவரை வரச் சொல்ல வில்லையே? இந்த வீட்டிலே பொழுது போகவில்லை எனக்கு! திடீரென்று நினைத்துக் கொண்டேன். புறப்பட்டு விட்டேன்” என்றாள் நீலா.

   

தமிழ் நாட்டில் மாமியார் ஸ்தானம் வகிக்கும் எந்தப் பெண்மணியும் நாட்டுப் பெண் தன் கணவனிடம் கூடக் கூறாமல் வெளியில் போவதை ஆட்சேபிக்காமல் இருக்க மாட்டாள். மீனாட்சி அம்மாளின் முகம் ஜிவுஜிவு என் வெந்தது. யோசித்தக் கொண்டே நிற்பவளை மதிக்காமல் நீலா விடுவிடு என்று நடந்து, தெருக் கதவைத் திறந்து கொண்டு போய் விட்டாள். நிமிர்ந்து பார்க்கும் மீனாட்சி அம்மாளின் எதிரில் ருக்மிணிதான் நின்று கொண்டிருந்தாள்!

   

"பார்த்தாயாடி!" என்று அதிசயத்தோடு பெண்ணைக் கேட்டுவிட்டு மீனாட்சி அம்மாள் மோவாயில் கையை வைத்துக் கொண்டு நின்றாள்.

   

"பார்க்கிறேனே அந்த வேடிக்கையை தினமும்தான்! சங்கரனை அவள் ஒரு சொல்லாக் காசுக்குக் கூட மதிக்க மாட்டாள். ஆமாம், சொல்லி விட்டேன். இப்பொழுதே அவனிடம் சொல்லி. கொஞ்சம் கண்டித்து வைக்க வேண்டும் ஆமாம்" என்றாள் ருக்மிணி.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.