(Reading time: 19 - 37 minutes)
Panithuli - Saroja Ramamoorthy
Panithuli - Saroja Ramamoorthy

   

ரயிலில் சந்தித்த பெண்மணியின் விலாசத்தைத் தேடிக் கொண்டு அவள் வீட்டிற்குப் போனாள் காமு. அழகிய சிறு தோட்டத்தின் நடுவில் சிறிய வீட்டில் அந்தப் பெண்மணியும் அவள் கணவனும் வசித்து வந்தார்கள். வீடு சிறியதே தவிர அங்கு அன்பும் ஒற்றுமையும் நிலவி இருந்தன. பணத் தின் ஆடம்பரம் இல்லாமல் பணத்துக்கு அடிமை ஆகாமல் பணத்தைக் கொண்டு வாழ்வை வளமுள்ள தாக்கிக்கொள்ள முடியும் என்பதை அத்தம்பதி உணர்த்தினர்.

   

அவர்கள் வீட்டுக் கூடத்தில் அன்பே உருவான புத்தரும், அஹிம்சை அண்ணல் காந்தி அடிகளும் மேஜைமீது வீற்றிருந்தனர். அறிவை வளர்க்கும் புஸ்தகங்கள் நிரம்பிய அலமாரி ஒரு புறம் வைக்கப்பட்டிருந்தது. உலகத்தைத் தன் ஆட்டத்தால் ஆட்டி ஊக்குவிக்கும் இறைவன் நடராஜனின் திரு உருவப்படம் மாட்டப்பட்டு, அதன் அருகில் நந்தா விளக்கும், அதில் புகையும் ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. கூடத்துக்கே ஒரு தேஜஸை அளித்தது.

   

உள்ளே நுழைந்தபோது காமு கூடத்தின் அலங்காரத் தைப்பார்த்து வியந்து சிறிது நேரம் நின்றாள். சமையல் அறையில் கணவனுக்கு உபசரித்து உணவு பறிமாறும் தன் சிநேகிதியின் இனிமையான குரல் காதில் ஒலித்தது.

   

"கமலா! என்ன, ரஸத்தில் கொஞ்சம் தாராளமாய் உப்பை அள்ளிப் போட்டிருக்கிறாய்?" என்று மனைவியைக் கணவன் கேலி செய்து கொண்டே ரஸத்தை வாங்கி உறிஞ்சிக் குடிப்பது காமுவுக்குக் கேட்டது.

   

'இந்தக் காலத்தில் உப்பு ஒன்று தான் மலிவாக விற்கிறது! அது சரி. உப்பு அதிகமாகவா போட்டிருக் கிறேன்?' என்று கேட்டுக் கலகலவென்று சிரித்தாள் கமலா.

   

ரயிலில் காமுவுடன் / பழகிச் சிரித்த அதே சரளமான சிரிப்பு. சாப்பாட்டில் ருசி குறைந்து விட்டது என்று கணவ னும் கோபிக்கவில்லை. அதை எடுத்துக் காட்டிக் கேலி செய்தாரே கணவர் என்று மனைவியும் கோபிக்கவில்லை. சரிக்கட்டிக் கொண்டு போகும் இந்த சுபாவம் குடும்ப வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். நம் வீட்டில் அப்பா ஒன்று சொன்னால் அம்மா ஒன்று சொல்கிறாளே என்று காமு ஆச்சரியப்பட்டாள்.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.