(Reading time: 19 - 37 minutes)
Panithuli - Saroja Ramamoorthy
Panithuli - Saroja Ramamoorthy

புண்ணைச் சிறிது ஆற்றியது. ஒன்றும் அறியாத தன்னை அவர்கள் கண்ணில் விரலைக் கொடுத்து ஆட்டும்போது, அவர்களை ஆட்டிப்படைக்க ஒருத்தி வந்திருப்பது அவளுக்கு ஒரு விதத்தில் திருப்தியாகத்தான் இருந்தது.

   

எவ்வளவு தான் பொறுமையை வகிப்பவளானாலும் அவளும் கோப தாபம், அன்பு, ஹிம்சை முதலிய உணர்ச்சிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவள்தானே? அவள் இருதயம் மனிதப் பண்பை உடையதுதான். தன் விடிவு காலத்தை எதிர்பார்த்து அந்த வீட்டில் அவள் இருந்து வருகிறாளே தவிர. மாமியாருக்கு அடிமையாக இருப்பதற்கு அல்ல.

   

சமையற்கட்டிலிருந்தபடி பெரியவர்கள் மூவருக்கு மிடையே நடந்த பேச்சைக் கவனித்தாள் சம்பகம். அவள் மனம் மீனாட்சி அம்மாளுக்காக இரங்கவில்லை. தன் சுகத்திலேயே நாட்டமுடைய ருக்மிணிக்காகவும் இரங்க வில்லை. நீலாவுக்காகவும் அவள் மனம் பச்சாதாபப்பட வில்லை. பிறர் துன்பம் கண்டு மனம் இரங்கும் தன் கொழுந்தன் சங்கரனுக்காகவே அவள் மனம் இரங்கினாள் "மதனி” என்று அன்புடன் மரியாதை செலுத்தும் சங்கரனின் சரளமான சுபாவம் அவள் மனத்தைக் கலக்கி அவள் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

   

------

   

காமுவின் தகப்பனாரும், யாருடைய உதவியுமின்றி அந்தப் பெரிய நகரத்தில் ஊரில் விற்ற வீட்டின் பணத்தை வைத்துக்கொண்டு ஒரு சிறிய மளிகைக்கடை ஆரம்பித்தார். சங்கரன் அவரை ஏமாற்றிய பிறகு வாழ்க்கையில் எவரை யுமே நம்பக்கூடாது என்கிற தீர்மானத்துடன் கடனுக்காகச் சாமான்கள் கொடுக்காமல் நாணயமுள்ளவர்களை வாடிக்கைக்காரர்களாக வைத்துக் கொண்டு வியாபாரம் செய்தார். செல்வம் அபரிமிதமாகப் பெருகாவிட்டாலும் வறுமை அவர்களை விட்டுப் போய் விட்டது.

   

காமுவும் கிராமத்தில் கல்யாணத்தை எதிர்பார்த்து எட்டாவது வகுப்புடன் படிப்பை நிறுத்திக் கொண்டவள். மறுபடியும் பள்ளியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தாள். ஒழிந்த வேளைகளில் தையல் வகுப்பில் சேர்ந்து துணிகள் தைப்பதற்குப் பழகிக் கொண்டாள். கல்யாணம் வாழ்க்கைக்கு அவசியம் தான் என்றாலும் கல்யாணம் செய்து கொண்டால் தான் வாழ முடியும் என்கிற எண்ணம் அவள் மனத்தை விட்டு அகன்று விட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.