(Reading time: 18 - 35 minutes)
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal

வீட்டு வேலைகளுக்கும் இலக்காகியதால் மிக்க மெலிவடைந்து தேக புஷ்டியும், ரத்த வலிவும் குறைந்து கேவலம் க்ஷீண திசைக்கு அவள் வந்து விட்டாள்.

   

அவள் தன்னாலான வரையில் அவன் குடிப்பதையும், தாசி வீடு போவதையும் எத்தனை தடுத்தும் அந்தப் படுபாவி அதை சட்டை செய்யாது தன் வேலையிலேயே கண்ணுக் கருத்துமானான்.

   

---

   

"எனக்கு என்ன குறைவு? என் சினேகிதனே எனக்கு விவாகத்தை முடித்து வைப்பதாகச் சொல்லி விட்டான்" என்று தைரியமாகப் பெண் பேசியாகிய பிறகு சினேகிதனிடம் தெரிவித்தால், "நான் சொல்லியது உண்மைதான். இச் சமயம் எனக்கு இவ்வித செலவு வந்து விட்டது. என்ன செய்வேன்?

   

----

   

அவன் தச்ச வேலை செய்து, தினம் கிடைக்கும் கூலியில் பெரும் பாகம் தன்னிரு செலவுகளுக்கும் போக எஞ்சிய சிறு அணாத் தொகையைக் குடும்பத்திற்குக் கொடுத்து வந்தான். அந்த சிறு தொகை குடும்பத்திற்குப் போதாமல் அனேக நாள் பட்டினி கிடக்க நேரும். குடிகாரன் தான் பணங் கொடுக்காத குற்றத்தை மறந்து "சாப்பாடு வயனமாக நான்குவகை ஏன் செய்யவில்லை?" என்று மனைவியை உதைப்பது வழக்கம். இவ்விதமே வெகு நாட்களாகத் தொந்தரவு செய்து கொண்டிருந்தான்; நாளா விருத்தியில் சிறு தொகை கொடுப்பதையும் நிறுத்தி விட்டான். பின்னும் சில மாதத்தில் சாப்பிட வருவதையும் நிறுத்தி விட்டான்.

   

நான்கு குழந்தைகளுடன் ஒரு பேதை என்ன செய்வாள் பாவம்! இரண்டு வீடுகளில் வேலை செய்ய ஆரம்பித்தாள். அதோடு ஆபீஸ்களுக்கு நான்கு பேருக்குச் சாப்பாடு எடுத்துச் செல்வதை ஏற்பாடு செய்து கொண்டாள். தினம் காலை வீட்டு வேலைகளைச் செய்து விட்டு, பகல் 10 மணிக்கு நான்கு வீட்டிற்கும் சென்று சாப்பாடுகளை வாங்கி வருவதற்குள் பதினோரு மணியாகிவிடும். ஒவ்வொரு மூலையில் ஒவ்வொரு வீடு, அதுபோலவே ஆபிஸும் ஒவ்வொரு இடமாக அவள் துரதிருஷ்டத்தினால் அமைந்தது.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.