பகல் பட படக்கும் வெயிலில் சென்னையிலுள்ள தார் ரோட்டில் தலையில் பெரிய பாரத்துடன் நடப்பதென்றால் அந்தோ! பரி தாபம்! பரிதாபம்! அந்தக் கண்ராவியை அனுபவித்தால் தான், கண்ணால் கண்டால் தான் தெரியும், வயிற்றுக் கில்லாக் கொடுமை யினாலும், நான்கு குழந்தைகளின் போஷணைக்காகவும் கோமதி அத்தகைய கொடிய வெயிலில் நடந்து, கால்கள் கொப்புளிக்கச் சாப்பாட்டை எடுத்துச் செல்லலானாள்.
----
நீ எப்படியாவது விவாகத்தைச் செய்து கொள். பிறகு உனக்கு நான் உதவி செய்கிறேன்." என்று கூசாது சொல்லிவிட, நம்பிய மனிதன் அந்த மனிதன் வார்த்தையினால் வெம்பிப் போய் விக்னேச்வார் விவாகம் செய்து கொண்டது போலச் சந்தியில் நிற்க நேருகின்றது.
---
ஒவ்வொருவரும் சாப்பிட்டு மிகுந்த சாப்பாட்டை எடுத்துக் கொண்டுவந்து குழந்தைகளுக்குப் போட்டுக் கணக்கு மிஞ்சினால் புசிப்பது; இல்லையேல் பட்டினி கிடப்பது. இவ்விதமாகவே தன் காலத்தைக் கடத்தனாள். வெயிலின் கொடுமையினால் அவள் கடந்து செல்வதற்குச் சற்று நேரமாகி விட்டால் அவளை அதட்டி வைது தடபுடல் படுத்துவார்கள் சாப்பாட்டு ராமன்கள்.
இவள் வேலை செய்யும் வீடுகளில் ஐந்து ரூபாய் கிடைக்கின்றது. நான்கு எடுப்புக் காப்பாட்டில் ஐந்துரூபாய், ஆக பத்து ரூபாய் கிடைப்பதில்,வீடு குடிக்கூலி மூன்று ரூபாய் போய் விட்டால் 7 ரூபாயும், எடுப்புச் சாப்பாட்டில் மிகுந்த சாப்பாடும், பத்து தேய்ப்பதில் மிகுந்த சாப்பாடுங் கொண்டு நான்கு குழந்தைகளும் அவளும் ஆக ஐந்து பேர்கள் ஒரு மாதம் பூராவும் புசிந்து வாழுவதென்றால் இந்த பட்டினத்தின் சாத்யமானதா என்பதை யோசித்துப் பாருங்கள். இவ்விதமாக எத்தனை ஏழைப் பெண்கள் வருந்துவதை நாம் கண்ணால் காண்கிறோம். இந்த ஏழ்மை நிலை என்றுதான் நமது பாரத நாட்டை விட்டு ஒழியுமோ? என்றுதான் பாரத மாதா வின் அருள் பிறக்குமோ ?..........
* * * * * *