(Reading time: 18 - 35 minutes)
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal

அக் குடிகாரப்பாவி என்றைக்கேனும் வீட்டுக்கு வருவது; கோமதி காலணா, தம்பிடி சேர்த்து வைத்திருந்தால் அதை சண்டையிட்டுப் பிடுங்கிக் கொண்டு போவது. இந்த வழியை மட்டும் அவன் விடாது செய்து வந்தான். கோமதியின் தேக பலம் ஏற்கெனவே குன்றி விட்டதோடு இத்தனை வேதனைகளுக் கிடையில் அதிக வேலை செய்வதும், எடுப்புச் சாதங் கொண்டு நடப்பதனால் தரின் சூடும், வெய்யிலின் வெப்பமும் ஒன்றுகூடி நாளுக்கு நாள் அவள் மிகவும் நலிந்து விட்டாள்.

   

---

   

வெளியூர்ப் பிரயாணம் வெகு ஜோர்தான். கண் காட்சிகள் அதி மனோ கரமே! ஊரும் நிரம்ப சுகமே! ஆனால் ஆறுமாதத்திற்குத் தன் ஊரில் செலவாகும் பணத்தை ஒரு மாத வெளியூர்ப் பிரயாணத்தில் செலவழிக்க நேர்ந்து விடுகின்றது. இதுதான் பெரிய கஷ்டம்.

   

----

   

இந் நிலைமையில் அவளுடைய கணவன், எத்தளை சொல்லியும் கேளாது அவளை இம்சிப்பதுடன் விடா மூர்க்கமாகவே இருந்தான். கோமதி தன் விதிப்பயனால் மீண்டும் கர்ப்பவதியாகி விட்டாள். கர்ப்ப சின்னத்தின் முதல் ஆரம்பமாகிய மசக்கை என்னும் நோய் பலமாகப் பீடித்து அவளை எழுந்து நடக்கவொட்டாது தசையோடு தள்ளிவிட்டது. அந்தோ ! ஏற்கெனவே கர்ப்பிணி; மேலும் கர்ப்பிணி என்ற வாக்கியம் உண்மையாகி விட்டதால் குழந்தைக ளெல்லாம் "பசியோ! பசியோ!" என்று கத்துகின்றன. எடுப்புச் சாப்பாடு நின்று விட்டதால் அதனால் பெறும் வருமானமே குறைந்து விட்டது. வீட்டு வாடகை ஒரு மாதத்திற்குச் சேர்ந்து விட்டது.

   

அபலையான கோமதி இந் நிலைமையில் என்ன செய்வாள்? தனக்கோ எழுந்து நடக்க முடியவில்லை. குழந்தைகளின் பசியையோ தீர்க்கும் மார்க்கமில்லை, கணவனோ இவளது கேவல நிலைமையைச் சற்றும் கவனியாது, இங்கு வருவாய் ஏதுமில்லை என்பதை யறிந்து வீட்டிற்கு வருவதையே அடியோடு விட்டு விட்டான்.

   

வீட்டு வாடதை கொடாமையினால் வீட்டுக்காரர்கள். "வாடகையை முதலில் கீழே 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.