(Reading time: 25 - 50 minutes)
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal

அன்பான பரிமளா! எழுந்திரு; விசனத்தை விலக்கு." என்று மிக்க வாஞ்சையோடு கூறினான்,

   

------

   

இதைக் கேட்ட பரிமனா, தலை நிமிர்ந்து கண்ணில் தாரை பெருகியவாறு, "நண்பரே! நான் எவ்விதமான தென்பைக் கொண்டு மனந் தேறுவேன்? இனி எனக்கு மகிழ்ச்சி என்பது உண்டா! என்னுடைய இப்போதிய மன நிலைமையில் என் வாழ்க்கையே முறிந்து விட்டதாயும், நான் நடைச் சவமாகி விட்டதாயும் என்னை யறியாது யாதோ சொல்லுகின்றது, என் விதியே எனக்கு இவ்விதம் சொல்லுகின்றதோ, அன்றி எனது முடிவைக் கடவுள் தான் சொல்லுகி றாரோ தெரியவில்லை. நான் கேவலம் ஓர் நாடக மாது என்றும், கூத்தாடி என்றும் பெயர் வாங்கி இனி பூமியில் இருப்பதைவிட மாண்டு மடிவது எனக்கு மெத்த சந்தோஷமாகத் தோன்றுகின்றது." என்று கூறி முடிப்பதற்குள் கேசவன் இடை மறுத்து "ஹா! பரிமளா! என்ன சொன்னாய்!.... இத்தனை இளம் பிராயத்தில் உனக்கு இத்தகைய பார யோசனையும், பார புத்தியும் எவ்விதம் உண்டாகியது? வேண்டாம். இத்தகைய விபரீத சித்தம் வேண்டாம், நீயோ புத்தியறியாத சிறுமி, உனது குழந்தைப் பருவத்தில் நீ அனேகம் வினையாட்டுக்கள் விளையாடியதாக எண்ணு. இதை நீ விபரீதமாக நினைத்தல் கூடாது. உன் விருப்பப்படி நீ இந்த நாடகத்திலிருந்து விலகி விடு, அதற்கு மேல் உன்னுடைய தாயாரும் நமது முதலாளியும் சொல்லுவது போலக் கேட்டு நடந்து கொள், பரிமளா! பொறாமையும், காமமும் நிறைந்த இக் கடிதங்களை மட்டும் நம்பி உன் மனத்தைப் பாழடித்துக் கொள்ளாதே. இவைகளைக் குப்பைக்குச் சமமாய் உதைத்துத் தள்ளு, இந்த சனியன் பிடித்த வார்த்தைகள் மறையட்டும். பரிமளா! உன் மனம் சற்று தேறும் பொருட்டு கடற்கரைக்கு எஜமானருடன் சென்று வரலாம்; வருகிறாயா?" என்றான்.

   

------

   

இது கேட்ட வனிதை "என் மனம் மகிழ்வதற்குக் கடலில் நான் கலக்க வேண்டும். அன்றி எனக்கு அக் கடலின் அலைகளைப் போன்ற சந்தோஷம் பொங்க வேண்டிய மார்க்கத்தைக் கடவுள் அளிக்க வேண்டும். இவ்விரண்டு மன்னியில் வேறு வகையில் எனக்குச் சந்தோஷமில்லை. நண்பரே! என் பிறவி இவ்வித மாகுமென்று நான் கனவிலும் கருதவில்லை." என்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.