கேசவன்:- பரிமளா! நீ சொல்வது உனக்குள்ள விசனத்தினால்; அதன் நன்மை தீமை நீ யறியவில்லை. உயிர் உன் ஸ்வாதீனமன்று, அவன் பிறப்பித்தான்; அவனே அழைத்துக் கொள்ளுகிறான். நீ முயற்சித்தாலும் உன்னால் எக் காரியமும் நடத்திவிட முடியாது, தற்கொலை எண்ணத்தை விட்டு விடு." என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கையில் பரிமளாவின் சகோதரி ஒடி வந்து ''அக்கா! இந்த அறையின் ஜன்னல் கதவருகில் வீதிப் பக்கத்தில் யாரோ ஒருவன் நின்று நீங்கள் பேசுவதை எல்லாம் ஒட்டுக் கேட்கிறான். அதை நான் இப்போதுதான் கவனித்தேன். அவன் என்னைப் பார்த்து "குழந்தை! இங்கே வா!" என்று கூப்பிட்டான்; நான் போனேன். என் கையில் ஒரு பொட்டணத்தைக் கொடுத்து இதைச் சாப்பிடு. உன் சகோதரியினிடத்தில் நான் பேச வேண்டும். அதற்கு எப்போது சமயம் கிடைக்கும். அதை எனக்குத் தெரிவித்தால் நான் உனக்கு இன்னும் ரூபாய் கூடத் தருவேன்" என்று கேட்டான். இது கேட்ட எனக்கு ஏதோ ஒரு மாதிரியாகி விட்டது. அதனால்தான் "நான் இதோ வருகிறேன்" என்று கூறி விட்டு ஒடி வந்தேன். அதோ பார்; ஜன்னலின் பக்கம் அவன் இருக்கிறான்" என்றாள்.
இவ்வதிசயமான சம்பவத்தைக் கேட்ட இருவரும் நெடுக்கலுற்று, ஆச்சரிய-மடைந்து விட்டார்கள். ஏற்கெனவே இருந்த கலக்கத்தோடு இச் செய்தியும் கூடப் புகுந்து கொண்டதால் இன்ன செய்வதென்பதை யறியாது நிமிட நேரம் தத்தளித்தார்கள். உடனே கேசவனுக்கு ஓர் யோசனை தோன்றியது. அதாவது பரிமளாவின் சகோதரியை அழைத்து 'அம்மா! நீ வீதியில் சென்று அந்த ஆசாமியைக் கண்டு "இன்று இரவு 9 மணிக்கு வந்தால் என் சகோதரியைப் பார்க்கலாம்" என்று சொல்லிவிட்டு வா" என்றான்.
--------
பரிமள:- ஏன்! தாங்கள் எதற்காக இவ்விதம் சொல்கிறீர்கள்? எனக்கு மிக்க பயமாக விருக்கிறதே! அவன் ஏன் இங்கு வந்து என்னைக் காண வேண்டும். எனக்கு விளங்க வில்லையே!
கேசவன்:- பரிமளா! பயப்படாதே! என்னுடைய வார்த்தையைப் பூர்ணமாக நம்பு! ஒரே உறுதியாயும் கடைசி வார்த்தையாயும் நான் சொல்கிறேன். என்னுடைய உயிர் நீங்கிய