(Reading time: 36 - 71 minutes)
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal

தருவர் என்றும் அங்ஙனம் பொருள் கிடைத்தால் என் கையினால் கொல்லப்பட்ட மனிதனின் குடும்பம் என்னால் அதோகதியாகி விட்டதாகையினால் அந்தத் தொகையை அவர்களுக்குக் கொடுத்து விடு என்றும், நீ எவ்விதமாயினும் பிச்சை எடுத்துச் சாப்பிடு என்றும் கூறிச் சென்றார்.

   

அவர் சென்ற சில மாதத்திற்குள்ளேயே உயிர் நீத்தார். அவருடைய வாக்கின்படியே நான் அவருக்காகக் கொடுக்கப்படும் தொகையை அந்த விறகுதலையனுடைய குடும்பத்திற்கே கொடுத்து வருகிறேன். இந்த விஷயத்தை இதுபரியந்தம் நான் பிறரிடமும் வெளியிடவில்லை; உங்களிடமும் கூறவில்லை. உன்னுடைய விவாகம் வரையில் அல்லது மைனர் நீங்கும் வரையில் தான் அந்தத் தொகை கொடுக்கப்படும் என்றும் பிறகு கொடுக்கப்படாதென்றும் முதலிலேயே சர்க்காரின் அறிக்கையாதலால் அந்தத் தொகை இன்னும் சில நாட்களோடு நின்றுவிடும். அதன் பிறகு அவர்களுக்கு நம்மால் ஏதேனும் உதவி செய்யவேண்டிய விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். பரிமளா! உனக்குக் கடவுள் தன் அனுக்ரகத்தினால் அளவற்ற செல்வத்தைக் கொடுத்திருக்கிறார். சர்க்காரின் தொகை நின்றவுடன் அந்தத் தொகையை நாம் நமது ஆயுள்கால பரியந்தம் அவர்களுடைய குடும்பத்திற்கு ஆதரவு அளித்துவிட்டால் உன் தந்தையின் ஆன்மா சாந்தி யடைந்துவிடும். அவருடைய உதிரத் தில் பிறந்ததற்காக நீ இதைச் செய்யக் கடமைப்பட்டிருக்கிறாய். இதை உன்னிடம் சரியான சமயத்திலேயே சொல்ல வேண்டுமென்பது எனது எண்ணம், இன்று தெரிவித்தேன்" என்றாள்

   

இது கேட்ட பரிமளா மிக்க பரபரப்புடன் "அம்மா! இது விஷயத்தில் நீ மிக்க தாமதம் செய்து விட்டாய். இவ் விவரம் எனக்கு முந்தியே தெரியுமாயின் நான் இத்தனை நாளைக்கு என்னால் கூடிய எத்தனையோ உபகாரம் செய்திருப்பேனே! நமது போஷகர் வந்த பிறகு அதற்குத் தக்க வழி நான் செய்கிறேன்; கவலைப்பட வேண்டாம்" என்று தேற்றினாள்.

   

பிறகு நாயுடுவுக்கு உடனே வரும்படியாக ஒர் தந்தி அனுப்பினாள். கேசவனின் உருவமே அவன் கண் முன்பு தோன்றிக் கொண் டிருந்தது. அதே விசனத்துடன் கடவுளை வேண்டிக் கொண்டிருக்கை யில் "பார்வதீ! என் செல்வமே! கோமளா! எத்தனையோ வருடங்களுக்கு முன் பறிகொடுத்துவிட்ட உங்களைப் பார்க்கும்படியாக இன்று நேர்ந்ததே!" என்று பரிமளாவின் அத்தை கூறிக் கொண்டே வந்து பரிமளாவைக் கட்டிக் கொண்டாள். அவளுடன் அவளது மகளும், மகனும் வந்தார்கள். உள்ளே அடைபட்டிருக்கும் மனிதன் அவ்விருவரையும் சாளரத்தின் வழியாகப் பார்த்த உடனேயே அவனது வயிற்றில் இடி இடித்தது. அவன் தன் கதி இதோடு முடிந்து விட்டதாகவே எண்ணிச் சோர்ந்து விட்டான்.

   

Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.

    

----------

   

   

தொடரும்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.