காலம் வந்து விட்டது. ஆதலால் தான் நான் நேரில் வந்தேன். பரிமளா! இனியேனும் என் கேள்விக்குப் பதில் சொல்லத் தடை செய்ய மாட்டாயல்லவா! மைனர் ஜமீந்தார் என்று வரைந்த பிரபு நான்தான்." என்று வெகு அட்ட காசமாய்க் கேட்டான்:
இதைக் கேட்ட பரிமளாவுக்கு அளவிட வியலாத வெறுப்பு உண்டாகி விட்டது. அவள் இந்த வார்த்தையை எதிர் பார்த்தாள். ஆகையினால் மன அதிர்ச்சி யடையவில்லை. வெகு உக்ரகத்தோடு பேசத் தொடங்கி "சீச்சி! வெளியே போ! மீசை முளைத்த ஆண் பிள்ளைகளாக உங்களை எல்லாம் ஈசன் பிறப்பித்தானே! அக்ரமப் பதரே! ஒரு பெண்பிள்ளை கடிதமெழுதாது எப்போது உதறித் தள்ளினாளோ, அதிலிருந்து மானமுள்ளவர்களாயின் மறுதரம் பேசுவார்களா! கேசவன் கதி யாதாயினும் உங்களைப் போன்றவர் களுக்கு என்ன வந்தது? இத்தகைய வார்த்தையை என்னிடம் பேச வேண்டாம்." என்று கூறிக் கொண்டே கட்டில் பக்கமாயிருந்த ஒரு பொத்தானை அழுத்தினாள்.
உடனே இரு வீரர்கள்'உள்ளே நுழைந்தார்கள். அவர்களிரு வரும் நாயுடுவின் கையாட்கள். உடனே ஒருவன் துப்பாக்கியை, வந்த மனிதனின் முகத்திற்கு நேரே காட்டியபடி நின்றான். மற்றொருவன் சிறிய காமராவினால் ஒரு போட்டோ எடுத்து விட்டான். அதே சமயம் பரிமளா வெகு வீரத்துடன் எதிரில் வந்து "அடேய் திருட்டுப் பயலே! இந்த இடத்தை நீ என்ன வென்று எண்ணிக் கொண்டு வந்தாய்! இப்பொழுது நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லப் போகின்றாயா, அன்றி துப்பாக்கிக்கு இரையாகப் போகின்றாயா! இந்த நிமிடத்தில் உன்னுடைய உயிர் உன் வசமில்லை; என் கையில் இருக்கின்றது. ஜாக்ரதை." என்று கூறி விட்டுப் புகைப் படம் எடுத்த ஆசாமியை நோக்கி "ஐயா! அவனுடைய ஜேபிகளில் உள்ள கடிதங்களை வெளியில் எடும்" என்று ராணிபோல ஆக்ஞாபித்தாள்.
அச்சமயம் பரிமளவல்லியின் முகத்தில் தோன்றிய வீரத் தன்மை பொருந்திய ஜாஜ்வல்யமான களையைக் கண்டு அவ்விரு வீரர்களும் பிரமித்தார்கள். அல்லி ராணியாக அவள் முன்னர் நடித்ததை அப்போது அவளுடைய தோற்றம் நினைப்பூட்டியது. உடனே அந்த மனிதன் வந்த ஜமீந்தாருடைய சட்டையிலுள்ள சகலமான பைகளையும் பார்த்து அதிலுள்ள கடிதங்களை எடுத்துப் பரிமளாவினிடத்தில் கொடுத்தான். பரிமளா அவைளைப் படித்துக் கொண்டே வருகையில் முக்கியமான கடிதங்கள் சில கிடைத்தன. அவைகளில் ஒன்று பின் வருமாறு:-
“கனம் ஐயா! நீங்கள் சொல்லியதுபோல நான் இங்கு கல்யாண வீட்டிற்கு வந்து சேர்ந்து