கேசவ:- சம்மந்தி வீட்டுக்கு வரவில்லை. இந்த வீட்டில் வேலை செய்யும் அம்மாளைப் பார்க்க வந்தேன். அவர்கள் இங்கிருக்கிறார்களா? இருந்தால் தயவு செய்து கூப்பிடுங்கள் - என்றான். இதைக் கேட்ட அவர்கள் இங்கு வேலைக்காரி இல்லை; அவள் வீட்டிற்குப் போய் விட்டாள். அவள் விடியற்காலந்தான் வருவாள். ஆகையினால் இங்கு படுத்துத் கொண்டிரும், காலையில் பார்க்கலாம்," என்றார்கள்.
கேசவன் அதற்கிசைந்து வீதித் திண்ணையில் ஒரு புறமாகப் படுத்தான். அவனுக்குத் தூக்கமே கொள்ள வில்லை. ஏதேதோ எண்ண;மிட்டவாறு படுத்திருக்கிறான். "எப்போது விடியற்கால மாகும். எப்போது தன் தாயைக் காணலாம்?" என்கிற பேராவலினால் மிக்கக் களிப்புடன் எதிர் பார்த்தபடியே கண்ணயர்ந்தான்.
நள்ளிரவு ; நடுநிசி. மணி சுமார் இரண்டிருக்கலாம். அச்சமயம் உட்புறத்தில் பெண்கள் படுத்திருக்கும் இடத்தில் அபாரமான கூக்குரல் உண்டாயது. "ஐயோ! ஐயோ! திருடன்! திருடன்! பிடியுங்கள்! பிடியுங்கள்!" என்று உண்டான சத்தத்தைக் கேட்ட எல்லோரும் கண் விழித்துக் கொண்டு "எங்கே! எங்கே! எங்கே திருடன் !" என்று கூவிக்கொண்டே விளக்குகளைக் கொளுத்திக் கொண்டு நாற்புறமும் தேட வாரம்பித்தார்கள்.
வீடு பூராவும் தேடியலைந்தார்கள்; ஒருவரையும் காணவில்லை. பெண்கள் எல்லோரும் தங்கள் நகைகளைக் கவனித்துக் கொண்டு "ஐயோ என் சங்கிலியைக் காணவில்லை, என் சரடு காணவில்லை. என் ஒட்டியாணம்....என் ஐடைபில்லை.... என் ஜடைபில்லை, என் ராக் கடி.... காசுமாலை.... வைரமாட்டல்... வைரக்கம்மல்.... ஐயோ! குழந்தை யின் கைவளையல்கள், கொலுசு, வெங்கி; ஒன்றும் காண வில்லையே!" என்று பலபேர் பலவிதமாகக் கூக்குரலிட்டுக் கத்தினார்கள்.
வீதியில், பெருத்த கலாட்டா நடப்பது போலப் பலவிதமாகப் பேசிக் கொண்டார்கள். ரயிலில் வந்த அலுப்பினாலும், மனத்தில் கொண்டிருந்த கவலையினாலும் நமது; கேசவன் தன்னையறியாது தூங்கி விட்டதால் இந்த கலபையில் கூட கண் விழிக்க வில்லை. வீதியிலேயே பலமாகப் பேசிக் கொண்டு தாறுமாறாக ஓடியலைந்த சத்தம் கேட்ட பின்னர் விழித்துக் கொண்டு எழுந்தான்; என்ன விஷயம் இங்கு நடந்த தென்பதே அவனுக்குத் தெரியாதாகையினால் தலையணையாக வைத்திருந்த தன் மேல் துணியை எடுத்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான்.