சொந்தமான தனமேயாக - ஸுகமோ செல்வமே!
மனத்தின் பெருமை பணத்திற் காமோ!
மாரன்வாம மேனிகாணத் தீமையாரு நீங்கியோடும் (ஸூ)
அவர் தனத்தில் ஏழையாய் இருந்த போதிலும் குணத்தில் அவரைவிட மேலான தனிகர் உண்டோ? கை நிறைந்த பணத்தைக் காட்டிலும் கண் நிறைந்த கணவனே மேல் என்பார்களே. அதற்கு இணங்க அவருடைய அழகு கண்கொள்ளா காட்சி அல்லவா? யோக்கியதையைக் கருதாமல் பணத்தையே தாசியர் நாடு வார்கள் என்று சொல்லப்படும் தூஷணை எனக்கு இல்லாமற் போகட்டுமே.
மல்லி : அம்மணி! மாமரத்தின் புஷ்பங்களெல்லாம் உதிர்ந்து போன பிறகு, அதை வண்டுகள் நாடுதல் உண்டோ?
வஸ : ஆகையினாலேதான் வண்டிற்குக் காமன் என்று ஒரு பெயர் ஏற்பட்டிருக்கிறது. அறிவில்லா வண்டுகள் அப்படி நன்றி அற்றதாயும், சுயநலம் உடையதாயும் இருந்தால் நன்றாய்ப் பகுத்தறிவைப் பெற்ற நாமும் அதைப் போலச் செய்தல் வேண்டுமா?
மல்லி : அப்படியானால் அவரை அடையும் வழியைப் பற்றி யோசனை செய்யத் தடையென்ன?
வஸ : அதற்காக நான் ஒரு தந்திரம் செய்திருக்கிறேன். அதை ஹேதுவாக வைத்துக் கொண்டு அவரிடம் திரும்பவும் போய்ப் பார்க்கலாம். ஆனால் அவருடைய பிரியத்தைப் பெறுவது சுலபமான காரியம் அல்ல, என்ன செய்கிறது?
மல்லி : (புன்சிரிப்புடன்) ஓகோ இந்த எண்ணத்தினாலே தான் ஆபரணங்களை அவருடைய மாளிகையில் வைத்து விட்டு வந்தீர்களோ?
வஸ : (திடுக்கிட்டு) இதென்ன சப்தம்? யார் ஓடி வருகிறார்கள். யார் இந்த மனிதன்?