முண் : கதவே இடிக்கலாண்டா!
(உட்புறத்தில்)
மல்லி : (மகிபாவனைப் பார்த்து) ஏனப்பா நீ எங்கிருந்து வருகிறாய்? நீ என்ன தொழில் செய்பவன்? நீ பயந்து ஓடி வந்த காரணமென்ன? என்னுடைய எஜமானி அம்மாளுக்குத் தெரியும்படி சொல்.
மகி : அம்மா என்னுடைய சொந்த தேசம் குஸ்ஸும புரம். நான் ஒரு ஏழையின் மகன். எனக்குக் கால் பிடிக்கும் தொழில் ஒன்றுதான் தெரியும்.
வஸ: அது ஸ்திரீகள் செய்யக் கூடிய தொழில் அல்லவா! அதையா கற்றுக் கொண்டாய்?
மகி : ஆம்! என்ன செய்கிறது! வயிறு வளர்க்க வேண்டுமே!
வஸ : ஸரி! மேல் விருத்தாந்தங்களைத் தெரிவி.
மகி : அந்த தேசத்தில் பிழைப்பதற்கு வழி இல்லாமையால் இந்த மங்களபுரத்திற்கு வந்து ஒரு பிரபுவினிடத்தில் வேலைக்கு அமர்ந்தேன். அவருடைய தேகத்தின் அழகைப் போலவே அவ ருடைய குணத்தின் அழகும் பொருந்தி இருக்கிறது. அவருடைய அன்பும் தயாளமும் என்னவென்று சொல்வேன்! பிறர்க்கு உதவு வதற்கு என்றே தனக்குப் பொருள் இருப்பதாக நினைப்பவர்.
மல்லி : அப்படியா? அவர் முழுத் திருடராய் இருக்கிறாரே.
மகி : அம்மா! அப்படிச் சொல்ல வேண்டாம். பாவம் வந்து சம்பவிக்கும். அவரைத் தூஷிக்கும் நாக்கு அழுகிப்போம்.
மல்லி : என்னுடைய எஜமானி அம்மாளின் குணங்கள் யாவற்றையும் திருடி அணிந்து