(Reading time: 29 - 58 minutes)
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar

(உடனே மல்லிகா வெளியிற் போய்க் கதவைத் திறக்கிறாள்.)

   

முண் : அடே! ஆரோ கதவெத் தொறக்கிறாடா!

   

திண் : அவன் எங்கிட்டோ போயி நொளஞ்சிட்டாண்டா! இன்னமேலே நம்ம கையிலே சிக்க மாட்டாண்டா போவோம்டா!

   

மல்லி : யார் நீங்கள்? கதவை இப்படித் தானா இடிக்கிறது! இரண்டு பேரில் முண்டன் யார்?

   

திண் : அடே அண்ணே! இவ எம்பிட்டு அளவாக்கிறாடா! ஒன்னெத்தாண்டா கேக்கறா!

   

முண் : முண்டனே நீ என்னாத்துக்கு தேட்றே? அவுனுக்கு நொம்ப வருசத்துக்கு மின்னெயே கண்ணாளம் ஆயிப் போச்சே!

   

திண் : இல்லாமெப் போனா, அவனோடெ கூடச் சூதாடலாமான்னு தேட்றியா? .

   

முண் : இம்புட்டுச் சோக்கான பொண்ணு என்னை என்னாத்துக்குத் தேட்றே? நாந்தான் முண்டன்; ஆசையா தேட்றியே எனக்கு என்ன தரப் போறே? சொல்லேன்.

   

மல்லி : உனக்கு யாராவது பணம் தரவேண்டுமா?

   

முண் : ஆமா, ஒரு களுதெ 10-ரூபா குடுக்கணும். அய்யோக்கிய முண்டே. அந்த நாயி இந்த ஊட்டுக்குள்ளற நொளஞ்சிதே அவன் ஒனக்கு என்ன சொந்தம்? ஆசெ நாயகனா?

   

திண் : அந்தப் பொணத்தெக் கட்டிக்கினா வாள்ந்து பூடுவே!

   

மல்லி : அடெ! ஏது வார்த்தைகள் வர வர அதிகரிக்கின்றன? போதும் நிறுத்துங்கள் அதிகப் பிரசங்கத்தை. இதோ இந்தக் காப்பை அவர் உன்னுடைய கடனுக்காக கொடுக்கச் சொன்னார். எடுத்துக் கொண்டு இங்கு நிற்காமல் நடவுங்கள்.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.