(உடனே மல்லிகா வெளியிற் போய்க் கதவைத் திறக்கிறாள்.)
முண் : அடே! ஆரோ கதவெத் தொறக்கிறாடா!
திண் : அவன் எங்கிட்டோ போயி நொளஞ்சிட்டாண்டா! இன்னமேலே நம்ம கையிலே சிக்க மாட்டாண்டா போவோம்டா!
மல்லி : யார் நீங்கள்? கதவை இப்படித் தானா இடிக்கிறது! இரண்டு பேரில் முண்டன் யார்?
திண் : அடே அண்ணே! இவ எம்பிட்டு அளவாக்கிறாடா! ஒன்னெத்தாண்டா கேக்கறா!
முண் : முண்டனே நீ என்னாத்துக்கு தேட்றே? அவுனுக்கு நொம்ப வருசத்துக்கு மின்னெயே கண்ணாளம் ஆயிப் போச்சே!
திண் : இல்லாமெப் போனா, அவனோடெ கூடச் சூதாடலாமான்னு தேட்றியா? .
முண் : இம்புட்டுச் சோக்கான பொண்ணு என்னை என்னாத்துக்குத் தேட்றே? நாந்தான் முண்டன்; ஆசையா தேட்றியே எனக்கு என்ன தரப் போறே? சொல்லேன்.
மல்லி : உனக்கு யாராவது பணம் தரவேண்டுமா?
முண் : ஆமா, ஒரு களுதெ 10-ரூபா குடுக்கணும். அய்யோக்கிய முண்டே. அந்த நாயி இந்த ஊட்டுக்குள்ளற நொளஞ்சிதே அவன் ஒனக்கு என்ன சொந்தம்? ஆசெ நாயகனா?
திண் : அந்தப் பொணத்தெக் கட்டிக்கினா வாள்ந்து பூடுவே!
மல்லி : அடெ! ஏது வார்த்தைகள் வர வர அதிகரிக்கின்றன? போதும் நிறுத்துங்கள் அதிகப் பிரசங்கத்தை. இதோ இந்தக் காப்பை அவர் உன்னுடைய கடனுக்காக கொடுக்கச் சொன்னார். எடுத்துக் கொண்டு இங்கு நிற்காமல் நடவுங்கள்.