செய்கிறாய் போல் இருக்கிறது.
வஸ : (காதைப் பொத்திக் கொண்டு) அடாடா! எவ்வளவு கடுரமான வார்த்தைகள்! ஸ்வாமி! நான் சொன்னது எல்லாம் உண்மையே அன்றி அணு அளவும் பொய்யல்ல. முற்றிலும் சத்யம். தங்கள் விரோதியும் தங்களுக்கு மனக் கவலை உண்டாக்க அஞ்சிப் பின்வாங்குவானே. அப்படி இருக்க, நான் அதைச் செய்வேனா? தங்களுடைய பாத சாஷியாகச் சொல்கிறேன். நான் தங்கள் பேரிலேயே காதல் கொண்டு நெடு நாளாய் இதே நோயால் வாடி வதங்கிக் கிடக்கிறேன். தாங்கள் என்னை உல்லங்கனம் செய்து விட்டால் எனக்கு வேறு புகலில்லை. நான் மற்றவர்களைப் போலப் பணத்திற்காக விரும்புபவள் அல்ல குணத்திற்காக விரும்புகிறேன் என்னை எப்படியாயி னும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நான் இனிமேல் திரும்பி என் மாளிகைக்குப் போக மாட்டேன்.
மாத : மாதரசி! எத்தனையோ கோடி தவம் செய்து அதன் பயனாய்க் கிடைக்கத் தகுந்த உன்னையும் உன் ஐசுவரியத்தையும் வேண்டாமென்று நான் சொல்ல வேண்டி இருப்பதைப் பற்றிப் பெரிதும் வருந்துகிறேன். என்னை மன்னிக்க வேண்டும்.
வஸ : பிரபோ! பிறர் காலில் கேவலம் ஒரு முள் தைப்பதைக் கண்டு பொறாமல் வருந்தி இளகும் தங்களுடைய தயாளமானது என் விஷயத்தில் மாத்திரம் ஏன் இரக்கம் கொள்ள வில்லை? இது என் அதிர்ஷ்ட ஹீனமோ? ஏன் என்னிடத்தில் தங்களுக்கு இவ்வளவு விருப்பமின்மை! என்னிடத்தில் யாதாயினும் குற்றம் குறைபாடுகளைக் கண்டீர்களோ? நான் கற்பில் தவறி நடந்திருக்கலாம் என்று நினைக்கிறீர்களோ? எங்கும் நிறைந்திருக்கும் ஸர்வேசுவரன் ஸாக்ஷியாகச் சொல்லுகிறேன். நான் அறிவு பெற்ற முதல் இதுவரையில் தங்களை அன்றி பிற புருஷரை மனதினால் நினைத்ததும் இல்லை; வாயால் குறித்ததும் இல்லை; தேகத்தால் பரிசித்ததும் இல்லை; இது உறுதி! இது சத்தியம்! தாங்களே எனக்கு நாதன்; தாய்; தந்தை; நண்பர்; உறவினர் முதலிய யாவரும் தாங்களே! நான் தொழும் கடவுளும் தாங்களே! இந்தப் பிறப்பில் நான் தங்களை அன்றி வேறு எவரையும் விரும்பேன். தங்கள் மேற்கொண்ட ஆசையென்னும் தீயால் கருகித் துவளும் எனக்கு உயிர்ப் பிக்ஷை கொடுத்துக் காப்பாற்ற வேண்டும். தருமப் பிரபோ!
மாத : ஆகா என்ன செய்வேன்? ஈசுவரா இதென்ன என்னை இவ்விதமான தரும சங்கடத்தில் வைத்துச் சோதனை செய்கிறாய்? ஹே! மங்கையர்க்கரசி! வருந்த வேண்டாம். உன்னிடத்தில்