Flexi Classics தொடர்கதை - வஸந்த கோகிலம் - 04 - வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்
இடம் வஸந்தஸேனையின் மாளிகை.
மேன் மாடியில் வஸந்தஸேனை சோபாவிற் சாய்ந்து கொண்டிருக்கிறாள்.
சசிமுகன் வெளியில் இருந்து மாளிகைக்குள் நுழைகிறான்.
காலம் மேற்படி தினம் விடியற்காலை.
சசிமுகன் : (தொண்டிச் சிந்து: நந்தன் சரித்திரம் ”பழன மருங்கனையும்” என்ற பாட்டின் வர்ண மெட்டு)
1. எனதே உயிர்நிலையாம் - அந்த
இந்திர சந்திரரும் இணையோ!
2. மனதே நினைப்பதெல்லாம் - இந்த
மாத்திரைக் கோலினால் யான் பெறுவேன்
3. இரவே எனது நகர் - அதில்
நித்திரையே படை யான் அரசன்
4. குறைவே திருட்டிலில்லை - கலை
கற்றலுங் கண்ணையிழத்தலு மேன்?
(தனக்குள்) என்னுடைய உத்தியோகமும் சந்திரனுடைய உத்தியோகத்தைப் போலவே இரவில் பிரகாசிப்பதும் பகலில் ஒளியை இழந்து ஒடுங்குவதுமாய் இருக்கிறது! இதனாலே தான் எனக்கு சசிமுகன் (சசி = சந்திரன்) என்று பெயர் கொடுத்தார்களோ! நான் இந்த மேன்மையான