ஆகா! அதோ வந்து விட்டாள் என் சுந்தரி! அவளை அரை கணம் காணாவிட்டால் என் மனம் படும் பாட்டை என்ன என்று சொல்வேன்? என் உயிரே துடித்துப் போகிறது. ஜூரமடித்த உடம்பில் சந்தனக் குழம்பைப் பூசினால் அது எவ்வளவு இன்பமாய் இருக்குமோ, அப்படி அல்லவோ இருக்கிறது! நெருப்பைப் போல எரிந்து தகிக்கும் என் மனத்தைக் குளிரச் செய்ய அதோ வந்துவிட்டாள் என் இரதி மல்லிகா! சரியான பெயர்தான்! மல்லிகைப் புஷ்பம் எப்படித் தன் வாசனையினால் மனிதரைப் பரவசப்படுத்துகிறதோ அவ்விதமே இவள் என் பஞ்சேந்திரி யங்களுக்கும் பிரும்மானந்தம் ஊட்டுகிறாள். (மெதுவாக) அடி மல்லிகா!
மல்லி : யார் அது? ஓகோ! சசிமுகரா! வாரும் வாரும் இவ்வளவு விடியற் காலத்தில் எங்கிருந்து வருகிறீர்? என்ன விசேஷம்?
சசி : (புன்முறுவலோடு) – கண்ணே! எல்லாவற்றையும் தெரிவிக்கிறேன். சமீபத்தில் வா!
மல்லி : உஸ்! கூச்சலிடாமல் பேசும். என் எஜமானி அம்மாள் காதில் விழப் போகிறது.
வஸந்த : (மேன் மாடிவில் தனக்குள்) என்ன! மல்லிகா விசிறி எடுத்துக் கொண்டு வரப் போனவள் இன்னம் வரவில்லையே! எங்கு போயிருப்பாள் (ஜன்னலின் வழியாகக் கீழே பார்க்கிறாள்) என்ன ஆச்சரியம்! யாரோ ஒரு புருஷனோடு பேசிக் கொண்டிருக்கிறாளே! ஒருவருக்கு ஒருவர் மிகவும் பிரியமாய்ப் பேசுவதாகத் தெரிகிறது! இதற்கு முன் பழகி அறிந்தவர்களைப் போலக் காணப்படுகிறது! சே! அவளை அவன் முத்தமிடுகிறானே! ஓகோ! காதலர்களோ! மல்லிகாவும் என்னைப் போல் யெளவன ஸ்திரீயல்லவா? இருக்காதா! உண்மைக் காதலை நாம் ஏன் கெடுக்க வேண்டும். அவர்கள் இச்சைப்படி செய்து கொள்ளட்டும். அவள் திரும்பி வரும் போது வரட்டும். கஷ்டப் பட்டவர்களுக்கு அல்லவா காதலின் துன்பம் தெரியும்.
மல்லி : சரி! நேரமாகிறது. நான் போக வேண்டும். விஷயத்தைச் சொல்லும். (அவன் நான்கு பக்கங்களையும் பார்க்கிறான்) ஏன் அவ்வளவு ஜாக்கிரதையாகப் பார்க்கிறீர்? என்ன பயம்! என் எஜமானி அம்மாள் மெத்தையில் இருக்கிறாள்.
சசி : நான் உன்னிடத்தில் ஒரு இரகசியம் தெரிவிக்க வேண் டும், இங்கே சமீபத்தில் வேறு