(Reading time: 19 - 38 minutes)
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar

   

மாத : ஆகா! அப்படியா! சந்தோஷம்! அதுவும் நமது நல்ல காலந்தான்! இவைகள் எவ்விதம் இவர்களிடம் வந்திருக்கக் கூடும்?

   

ஸோமே: (தோழியிடம்இரகசியமாக) உண்மையில் அப்படித்தானா?

   

தோழி : (இரகசியமாக) உண்மையில் அவைகளே!

   

ஸோமே : நிச்சயந்தானா?

   

தோழி : சத்தியமாய் அவைகளே!

   

ஸோமே : (சந்தோஷத்துடன்) ஸ்வாமி! சந்தேகமே இல்லை.

   

மாத: ஸகி! உன் வாயால் சொல். இது நிஜந்தானா?

   

தோழி : நிஜமே!

   

மாத : (சந்தோஷத்துடன்) ஆகா! நல்ல சங்கதி தெரிவித்தாய் என்னிடத்தில் எவர் சந்தோஷ சங்கதியைத் தெரிவிக்கிறார்களோ, அவரை நான் வெறுங்கையுடன் அனுப்புவதே இல்லை. இதோ இந்த வைர மோதிரத்தை எடுத்துக் கொள். (தன் விரலில் மோதிரம் இருப்பதாய் நினைத்து, இழுக்கப் பார்க்கிறார். இல்லை என்றறிந்து வெட்கமடைகிறார்)

   

வஸ : (ஒருபுறமாக) ஆகா! *தனத்தை வைத்துக் கொள்வதற்கு இவர் அல்லவோ அருகமானவர்! என்ன தாராள குணம். அதனாலேதான் சீக்கிரத்தில் ஏழையாய் விட்டார்! பணத்தில் ஏழையான போதிலும் தயையில் மாத்திரம் இவர் முன் போலவே கோடீசுவரராய் இருக்கிறார். இவரை நான் என் மனதார நினைத்து விட்டுப் புருஷனாக அடையா விட்டால், இந்த ஜென்மமே வியர்த்தம்!

   

மாத : (தனக்குள் விசனத்தோடு) தன் சந்தோஷமும் கோபமும் யாதொரு பயனுமில்லாமல் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.