மாத : எனக்குக் கடன்காரி யார் இருக்கிறாள்?
ஸோமே : பலே! நன்றாய் இருக்கிறதே! நீங்கள் கொடுக்க வேண்டிய கடனை இதற்குள் மறந்து விட்டீர்களே! வஸந்த ஸேனைக்கு நீங்கள் கொடுக்க வேண்டியது நினைவிற்கு வர வில்லையா?
மாத : என்ன விளையாடுகிறாயோ?
ஸோமே : இல்லை இல்லை; நிஜமே. இதோ தனபாலன் வந்திருக்கிறான். வேண்டுமானால் அவனைக் கேளுங்கள்.
மாத : தனபாலா! வஸந்தஸேனை வந்திருப்பது நிஜந்தானா?
தன : ஆம், ஸ்வாமி!
மாத : ஆகா! சந்தோஷ சங்கதி கொண்டு வந்தவர் வெறுங் கையோடு போகக் கூடாது. இதோ எனது அங்க வஸ்திரத்தை உன் சிரமத்திற்காக எடுத்துக் கொள். (கொடுக்கிறார்) போ! சீக்கிரம் உள்ளே அழைத்து வா.
தன : உத்தரவு! (போகிறான்)
ஸோமே : நான் சொன்னது உண்மை என்று இப்பொழுதாவது மனதில் பட்டதா? அவள் எதற்காக வருகிறாள் என்பது தெரிகிறதா?
மாத : எதற்காக வருகிறாள்?
ஸோமே : அவளுடைய ஆபரணங்களின் கிரயம் நம்முடைய
வைர ஸரத்தைக் காட்டிலும் அதிகமானது. அந்த அதிகத்தைப் பெறும் பொருட்டு