(Reading time: 19 - 38 minutes)
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar

   

மாத : எனக்குக் கடன்காரி யார் இருக்கிறாள்?

   

ஸோமே : பலே! நன்றாய் இருக்கிறதே! நீங்கள் கொடுக்க வேண்டிய கடனை இதற்குள் மறந்து விட்டீர்களே! வஸந்த ஸேனைக்கு நீங்கள் கொடுக்க வேண்டியது நினைவிற்கு வர வில்லையா?

   

மாத : என்ன விளையாடுகிறாயோ?

   

ஸோமே : இல்லை இல்லை; நிஜமே. இதோ தனபாலன் வந்திருக்கிறான். வேண்டுமானால் அவனைக் கேளுங்கள்.

   

மாத : தனபாலா! வஸந்தஸேனை வந்திருப்பது நிஜந்தானா?

   

தன : ஆம், ஸ்வாமி!

   

மாத : ஆகா! சந்தோஷ சங்கதி கொண்டு வந்தவர் வெறுங் கையோடு போகக் கூடாது. இதோ எனது அங்க வஸ்திரத்தை உன் சிரமத்திற்காக எடுத்துக் கொள். (கொடுக்கிறார்) போ! சீக்கிரம் உள்ளே அழைத்து வா.

   

தன : உத்தரவு! (போகிறான்)

   

ஸோமே : நான் சொன்னது உண்மை என்று இப்பொழுதாவது மனதில் பட்டதா? அவள் எதற்காக வருகிறாள் என்பது தெரிகிறதா?

   

மாத : எதற்காக வருகிறாள்?

   

ஸோமே : அவளுடைய ஆபரணங்களின் கிரயம் நம்முடைய

   

வைர ஸரத்தைக் காட்டிலும் அதிகமானது. அந்த அதிகத்தைப் பெறும் பொருட்டு 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.