(Reading time: 19 - 38 minutes)
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar

சொல்வதைக் கேளுங்கள். பிறகு துன்பப்பட நேரும்.

   

(தனபாலன் ஒரு பக்கமாய் வருகிறான்)

   

(தனக்குள்) இதோ மாதவராயர் இருக்கிறார்; நேரில் அவரிடம் போக வெட்கமாக இருக்கிறது. ஒருவித அச்சமும் என்னை வதைக்கிறது. அதோ அந்த ஸோமேசனும் இருக்கிறான். மெதுவாகச் சைகை செய்து அவனை கூப்பிடுகிறேன். (ஒரு மண் சட்டியை எடுத்து ஸோமேசன் பேரின் மெதுவாக எறிகிறான்)

   

ஸோமே : (திடுக்கிட்டு மேலே பார்த்து) ஆகா! யார் என் பேரில் கல்லைப் போட்டது?

   

மாத : மதிளின் மீது இருக்கும் புறாக்கள் தம் விளையாட்டில் தள்ளி விட்டிருக்கலாம்.

   

ஸோமே : (மேலே பார்த்து) ஏ போக்கிரிப் புறாக்களே! உங்களுக்கு இவ்வளவு குறும்பா! புளியம் பழங்களை உலுக்கி விடுவதைப் போல் உங்களை இந்தத் தடியால் மதிளில் இருந்து ஓட்டி விடுகிறேன். .

   

மாத : சோமேசா! போனால் போகிறது; உட்கார்ந்து கொள். சாந்தமே உருவாகி வந்த புறாக்களை வருத்தாதே! அவைகள் ஜோடி ஜோடியாய்ச் சேர்ந்து கொஞ்சிக் குலாவிக் கும்காரம் செய்து எவ்வளவு அழகாய் விளையாடுகின்றன! அவைகளைப் பிரித்து விடாதே.

   

தன : (தனக்குள் புன்சிரிப்புடன்) முட்டாள் பிராம்மணன்! மேலே புறாக்களைப் பார்க்கிறானே ஒழிய என் பக்கமாகத் திரும்பவில்லை! இவனுக்கு இன்னொரு வந்தனம் அளிக்கிறேன். (இன்னொரு மண்கட்டியை எறிகிறான்)

   

ஸோமே : (திடுக்கிட்டு எழுந்து திரும்பிப் பார்த்து) இதென்ன மறுபடியும் விழுகிறதே! (கொஞ்ச துரம் அப்பால் போய்) அதோ நிற்கிறவன் யார்? தனபாலனல்லவோ? (சமீபத்தில் போய்) அடே தனபாலா! வாவா.

   

தன : ஸ்வாமி! தெண்டம் வருகிறது!

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.